Thursday, April 26, 2012

ஸ்ரீ எம்பெருமானாரின் திரு நக்ஷத்ரம் -(27--04--2012 )

THANKS to-- yengal gathiye!iraamaanusa muniye!     
Posted by:      "soundararajan desikan"            srikainkarya@yahoo.com                                       srikainkarya        
      Thu Apr 26, 2012 1:24 am        (PDT)   

Dear Swamin
This is my submission during the "Jayanthi " of Sri Udaiyavar
Sarvam Sree Hayagreeva Preeyathaam
Dasan
Uruppattur Soundararajan
----- Forwarded Message -----
From: Desikan Soundararajan <srikainkarya@gmail.com>
To: yennappan@computer.net;
Sent: Thursday, 26 April 2012
Subject: yengal gathiye!iraamaanusa muniye!

அடியேனின் விண்ணப்பம்
                                          ஸ்ரீ பாஷ்யகார என்கிற பெரிய ஏரியிலே , ஸ்ரீ ஆளவந்தார், மணக்கால் நம்பி, பெரிய நம்பி, மற்றும் திருக்கோட்டியூர் நம்பி போன்ற பரம ஆசார்யர்கள்  உபதேசித்த ,கங்கா ப்ராவாஹம் போன்ற உபதேசங்கள் நிரம்பி இருக்கின்றன. ஸ்ரீ உடையவர், இந்தப் பெரிய ஏரிக்கு மதகுகள் போல 74   சிம்ஹாசனாதிபதிகளை  நியமித்து, ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை நன்கு செழித்து வளரச்செய்தார். 
                                       ஸ்ரீ எம்பெருமானாரின் திரு நக்ஷத்ரம் நாளை (27--04--2012 )அமைகிறது.
                       இந்தப் பெரும் பாக்ய நாளில் , திருவரங்கத்து அமுதனார் அருளியுள்ள "இராமானுச நூற்றந்தாதியை " சேவிப்பதும், அவற்றின் பொருளை அகத்தில் கொள்வதும் , அதன் பயனாக சம்ப்ரதாய ஊற்றம் கொண்டு , மென்மேலும் பகவத், பாகவத கைங்கர்யங்கள்  செய்ய விழைவதும் சாலச் சிறப்பு உடைத்து.
இதற்காக, அடியேன் பல நாட்களாக முயற்சி எடுத்தும், இன்டர்நெட்  ஒத்து உழைக்கவில்லை. இதை, அடியேனின் பரம ஆப்தர் அறிவார். இருப்பினும், ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவனைத் த்யானித்து, முடிந்தவரை, "எங்கள் கதியே, இராமானுச முனியே " சமர்ப்பித்து உள்ளேன். சில எழுத்துக்களுக்கு, சரியான ஆங்கில எழுத்துக்கள் தெரியவில்லை. பிழை இருப்பின் அடியேனை மன்னித்து, குணம் இருப்பின் கொண்டாடி ,
அடியேனைத் திருத்தி அருள வேண்டுகிறேன்
இதன் பிறகு "ஸ்ரீ வேதாந்த தேசிக நூற்றந்தாதி " வரும்; விரைவில் வரும்
தொடர்ந்து படியுங்கள்
                           எங்கள் கதியே ! இராமானுச   முனியே ! 
                         ----------------------------------------------------------
                                      தனியன் 
                                     --------------
 முன்னை வினை அகல மூங்கில் குடி அமுதன்
பொன்னங்கழல் கமலப் போதிரண்டும் ------என்னுடைய
சென்னிக்கு அணியாகச் சேர்த்தினேன்   தென் புலத்தார்க்கு
என்னுக் கடவுடையேன்  யான் 
                         ---------------------
நயந்தரு பேரின்பமெல்லாம் பழுதன்றி     நண்ணினர் பால்
சயந்தரு கீர்த்தி  இராமானுச முனி  தாளிணை மேல் 
உயர்ந்த குணத்துத் திருவரங்கத்து  அமுது ஓங்கும் அன்பால்
இயம்பும்  கலித்துறை அந்தாதி ஓத  இசை நெஞ்சமே
                    -----------------
சொல்லின் தொகை கொண்டு உனதடிப் போதுக்குத் தொண்டு செய்யும்
நல்லன்பர் ஏத்தும்   உன் நாமமேல்லாம்  என் தன் நாவினுள்ளே
அல்லும் பகலும் அமரும்படி நல்கு  அறுசமயம்
வெல்லும் பரம    இராமானுச ! இதென் விண்ணப்பமே
                -----------------
இனிஎன் குறை நமக்கெம்பெருமானார்    திருநாமத்தால்
முனி தந்த நூற்றெட்டு சாவித்திரிஎன்று     நுண் பொருளைக்
கனி தந்த  செஞ்சொற் கலித்துறை அந்தாதி பாடித் தந்தான்
புனிதன் திருவரங்கத்து அமுதாகிய புண்ணியனே
                  --------------------  
நான்காவது தனியன் கூறுவதாவது;---நூற்றெட்டு ஆவ்ருத்தி ஜெபிக்கப்படும், சாவித்ரியின் பொருளாகிய ----அதன் சூக்ஷ்ம அர்த்தத்தை---
                                                                        இது பகவானால் உபதேசிக்கப்பட்டு, விச்வாமித்ரரால் பிரகாசம் செய்யப்பட்டதை , ஆசார்யரான  
                                                                         எம்பெருமானாரைத் த்யாநிப்பதால், தர்ம விஷயமான புத்தியை அளிக்கும் கலித்துறை
                                                                         அந்தாதியை புண்ணியரான திருவரங்கத்து அமுதனார் ,பாசுரமிட்டுத தந்துள்ளார்
                                                                                           ----------------
 இந்தத்  தனியன் மேல் நாட்டில் சேவிக்கப்படுகிறது.  ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் அருளிய " கண்ணிநுண் சிறுத்தாம்பு " முழுக்க, முழுக்க,
ஸ்ரீ நம்மாழ்வார் விஷ்யமாகவே இருக்கிறது.  ஆனால், நமது பூர்வர்கள்,   அதை, முதலாயிரத்தில் சேர்த்து அனுசந்திக்கிறார்கள்.
அதைப் போலவே, திருவரங்கத்து அமுதனார் அருளிய "இராமானுச நூற்றந்தாதியை " நான்காவது ஆயிரத்தில் சேர்த்து அனுசந்த்கிக்கப்படுகிறது.
"பகவத் சேஷத்வ கைங்கர்யங்களுக்கு எல்லை------------பாகவத சேஷத்வ கைங்கர்யங்கள் "
                                   ----------------------------------------------
" இராமனுசர் " என்னும் "சொல்" லக்ஷ்மணனையும் குறிக்கும்; கண்ணனையும் குறிக்கும்; ஏன்---பரதனையும், சத்ருக்னனையும் கூடக் குறிக்கும்.
பகவான் ஸ்ரீ ராமனாக அவதரித்து, சாமான்ய தர்மம், விசேஷ தர்மம், வர்ணாஸ்ரம தர்மம், சரணாகத தர்மம் என்று செய்து , தர்மத்தை ஸ்தாபித்துக் காட்டினார். அவருக்குப் பின்பாக , இந்த " அனுஜர் " ( ராமானுஜர் ) சாமான்ய, விசேஷ, வர்ணாஸ்ரம, தர்ம ஸ்தாபன, சரணாகத ரக்ஷணம் செய்து காட்டி உள்ளார். "ராமா " என்பது ஸ்ரீ ஆண்டாளையும் குறிக்கும். " ராமா " என்கிற ஆண்டாள், அனுஜா---எந்த ஆழ்வார்களுக்குப்
 பின்பு தோன்றியவளோ, அவளுக்குப் பின்பாக எந்த ஆழ்வார்கள் தோன்றினார்களோ, அவர்கள் யாவருமே ராமானுஜர்களாய்,
அவர்கள் அனைவருமாக அவதாரம் எடுத்தவர் ஸ்ரீ ராமானுஜர். "ராமை " என்கிற பெரிய பிராட்டியைப் போல, "நிக்ரஹம் " என்பதே தெரியாமல்,
"அனுக்ரஹ  " வடிவமாய்,  பெரிய  பிராட்டியைப்  பின்பற்றி ,  "பிரஜா ரக்ஷணம் " செய்தவர் இராமானுசர். இப்படியாகப் பலப் பலப் பொருள்களைக்
கூறிக்கொண்டே போகலாம்.
    பகவத் ராமானுஜரைப் பற்றி, "இராமானுச நூற்றந்தாதி " அருளியவர் திருவரங்கத்தமுதனார். இவரைப் "பெரிய கோயில் நம்பி " என்றும் அழைப்பர். இவர், எம்பெருமானாரின் நியமனத்தினால், ஸ்ரீ கூரத்தாழ்வானாலே திருத்தப் பெற்றவர். ஸ்ரீ கூரத்தாழ்வானை ஆஸ்ரயித்தவர்.
இப்படி, ஸ்ரீ கூரத்தாழ்வானை ஆச்ரயித்து, தம் ப்ராசார்யரும், தம்மால் ஈடு இணையின்றி அனுபவிக்கப் பெற்றவருமான எம்பெருமானார்
 விஷயமாக, ஆயிரத்துக்கும் மேலான  பாசுரங்கள் இயற்றியதாகவும், அவற்றை எம்பெருமானார் விரும்பவில்லை என்றும், பிறகு, அரங்கன் நியமனத்தின் பேரில் "நூற்றந்தாதி " இயற்றி, எம் பெருமானாரும்  ,   பெருந் திரளாக பக்தர்களும் திருவரங்கன் திரு முன்பே கூடியிருந்தபோது, எல்லோரும் போர உகக்க,
"இராமானுச  நூற்றந்தாதியை " விண்ணப்பித்தார் என்று சொல்வர்.        
"இராமானுச நூற்றந்தாதி' அமுதுக்கு அமுது; அமுதனார் அருளிய அமுது; திருவரங்கன் உகந்த அமுது;  நமக்கெல்லாம் அமுது;
இந்த அமுதத்தில் , சிலவற்றை அள்ளிப் பருகலாம் வாருங்கள், பகவத் ராமானுஜர் திரு நக்ஷத்திர சுப தினத்தில் ,இதை விட பாக்யம்
வேறு எது !
 
                          எங்கள் கதியே ! இராமானுச முனியே !
                                      ---------------------------

                                                                                                                                                                         
  1)  பூமன்னு மாது  பொருந்திய மார்பனின்  புகழ் மலிந்தபாமன்னு  மாறன் அடி பணிந்து உய்ந்தவன் ; பல்கலையோர்  தாம் மன்ன வந்த இராமானுசன்    !
  2)      குறையல் பிரான்  அடிக்கீழ் விள்ளாதஅன்பன்  இராமானுசன்  !
  3)     பொருவருஞ்சீர்  ஆரியன் செம்மை இராமானுசன்  !
 4)     ஊழி முதல்வனையே  பன்னப் பணித்த இராமானுசன்   !
 5)    எனக்குற்ற  செல்வம் இராமானுசன்   !
 6)    இயலும் பொருளும் இசையத் தொடுத்து ஈன்கவிகளன்பால்  மயல் கொண்டு வாழ்த்தும்  இராமானுசன்  !
 7)   பழியைக் கடத்தும் இராமானுசன்  !
 8)     பொய்கைப் பிரான் மறையின் குருத்தின் பொருளையும் ,செந்தமிழ்த் தன்மையும் கூட்டி, ஒன்றத் திரித்தன்  
            எரித்த திருவிளக்கைத்  தன்திருவுள்ளத்தே  இருத்தும் பரமன் , இராமானுசன்  !
  9)    இறைவனைக் காணும்  இதயத்து இருள் கெட, க்ஜானமென்னும்  நிறை விளக்கேற்றிய   , பூதத் திருவடித் தாள்கள்
            நெஞ்சத்து உறைய வைத்து ,  ஆளும் இராமானுசன்  !  
10)  மன்னிய பேரிருள் மாண்ட பின்  கோவலுள்  மாமலராள் தன்னொடு மாயனைக் கண்டமை காட்டும்
              தமிழ்த் தலைவன் பொன்னடி போற்றும் இராமானுசன்  !
 11)  சீரிய நான்மறைச்செம்பொருள்  செந்தமிழால் அளித்த பார் இயலும், புகழ்ப் பாண் பெருமாள் ,சரணம் ஆம் பதுமத்    தார் இயல்
          சென்னி  இராமானுசன்   !
 12 ) இடங்கொண்ட கீர்த்தி மழிசைக்கு  இறைவன் இணை அடி போது அடங்கும் இதயத்து இராமானுசன்  !
       13) செய்யும் பசு துளபத்து எழில்  மாலை  செந்தமிழில்  பெய்யும்  மறைத் தமிழ் மாலையும், பேராத சீர் அரங்கத்து
           ஐயன் கழற்கு அணியும் பரன் தாள் அன்றி ஆதரியாமெய்யன் , இராமானுசன்  !
       14)கொல்லிக் காவலன் சொல் பதிக்கும் கலைக் கவிபாடும் பெரியவர் பாதங்களே துதிக்கும் பரமன்  இராமானுசன் 
       15) சோராத காதல் பெருஞ்சுழிப்பால் தொல்லை மாலை ஒன்றும் பாராது அவனைப் பல்லாண்டு காப்பிடும்
             பான்மையன் தாள் பேராத உள்ளத்து இராமானுசன்   !
        16) தாழ்வு ஒன்று இல்லா மறை தாழ்ந்து, தல முழுதும் கலியே ஆள்கின்ற நாள் வந்து அளித்தவன், அரங்கர் மௌளி
            சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல் அருளால் வாழ்கின்ற    வள்ளல் இராமானுசன்  !
        17) கண்ணமங்கை நின்றானைக்கலை பரவும் தனியானைத் தண்தமிழ்   செய்த நீலன் தனக்குஉலகில்  இனியான் --எங்கள் இராமானுசன்  !
        18) எய்தற்கு அரிய  மறைகளை ஆயிரம் இன் தமிழால் செய்தற்கு உலகில் வரும் சடகோபனை சிந்தையுள்ளே பெய்தற்கு
           இசையும் பெரியவர் ,சீரை உயிர்கள் எல்லாம் உய்தற்கு உதவும் இராமானுசன்  !
        19) மாறன் விளங்கிய சீர் நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று  உறு பெரும் செல்வமும்  தந்தையும் தாயும் உயர் குருவும் ,
          வெறிதரு பூமகள் நாதனும் என்று நீள் நிலத்தோர் அறிதர நின்ற இராமானுசன்  !
        20)  ஆரப் பொழில் தென் குருகைப் பிரான் அமுதத் திருவாய் ஈரத் தமிழின் இசை உணர்ந்தோர்க்கு இனியவர்தம்,
         சீரைப் பயின்று உய்யும் சீலம் கொள் நாதமுனியை   நெஞ்சால் வாரிப் பருகும் இராமானுசன்  !
        21)தூய நெறி சேர்  யதிகட்கு இறைவன்  யமுனைத் துறைவன் இணை அடியாம் கதி பெற்று உடைய இராமானுசன்  !
        22) கார்த்திகையானும், கரிமுகத்தானும், கனலும் முக்கண் மூர்த்தியும், மோடியும், வெப்பும், முதுகிட்டு,மூவுலகும்
        பூத்தவனே என்று போற்றிட, வாணன் பிழை பொறுத்த தீர்த்தனை ஏத்தும் இராமானுசன்  !
        23 )வைப்பாய வான் பொருள் என்று நல்லன்பர் மனத்தகத்தே எப்போதும் வைக்கும்  இராமானுசன்  !
        24 )பொய்த்தவம் போற்றும் புலைச் சமயங்கள் நிலத்து     அவிய, கைத்த மெய்க்ஜானத்து     இராமானுசன்  !
        25 )கார் ஏய் கருணை   இராமானுசன்  !
       26 )என் செய்வினை ஆம் மெய்க் குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை, திக்கு உற்ற கீர்த்தி இராமானுசன்  !
       27)வெள்ளைச் சுடர் விடும் உன்   பெருமேன்மைக்கு  இழுக்கு இது என்று, தள்ளுற்று இரங்கும் இராமானுசன்    !
       28)நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன் ,நங்கள் பஞ்சித் திருவடிப் பின்னைதன் காதலன் பாதம்
             நண்ணா வஞ்சர்க்கு அரிய இராமானுசன்  !
       29)தென் குருகைப் பிரான் பாட்டென்னும் வேதப் பசுந் தமிழ் தன்னைத்  தன் பக்தி என்னும்  வீட்டின் கண்  வைத்த இராமானுசன்  !
      30)தொல் உலகில் , மன் பல உயிர்கட்கு இறைவன் மாயன் என மொழிந்த அன்பன் ,அனகன், இராமானுசன்  !
      31)இன்று  ஓர் எண் இன்றியே  காண் தரு  தோள் அண்ணல் தென் அத்தியூரர் கழல் இணைகீழ் பூண்ட அன்பாளன் இராமானுசன்  !
      32) செறு  கலியால் வருந்திய   உலகத்தை வண்மையினால் வந்து எடுத்து, அளித்த அருந்தவன் எங்கள் இராமானுசன்.
     33)கேள்வன் கை ஆழி என்னும்  படையொடு  நாந்தகமும்,படர் தண்டும், ஒண் சார்ங்க வில்லும் புடையார் புரிசங்கமும்
           இந்தப் பூதலம் காப்பதற்கு   என்று இடையே இந்நிலத்தே ஆயினான் இராமானுசன் !
     34)நிலத்தை செறுத்துண்ணும் நீசக் கலியை,   நினைப்பரிய பலத்தைச் செறுத்தும் பிறங்கியதில்லை,
          என் பெய்,வினைத்தென்புலத்தில் பொறித்த அப்புத்தகச் சும்மை பொறுக்கிய பின் ,நலத்தைப் பொறுத்தது ,தன் நயம் புகழ் இராமானுசன் !
     35) பொன்னரங்க மென்னில் மயலே பெருகும், இராமானுசன் 
     36) காசினியோர் இடரின் கண் விழுந்திடத் தானும் அவ்வொண்  பொருள்கொண்டு ,அவர்பின் படரும் குணன் எம் இராமானுசன் !
     37)படி கொண்ட கீர்த்தி ராமாயணமென்னும் பக்தி வெள்ளம் குடிகொண்ட கோயில் இராமானுசன் !
     38)புண்ணியர் தம் வாக்கில் பிரியா இராமானுசன் !
     39)இருள் கொண்ட வெந்துயர் மாற்றித் தன் ஈறில்  பெரும் புகழே தெருளும் தெருள் தந்த இராமானுசன் !
    40)கண்ணனுக்கே ஆமது காமம்; அறம், பொருள் , வீடு , இதற்கு என்று உரைத்தான் வாமனன் சீலன் இராமானுசன் !
    41)   மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே  கண்ணுற நிற்கிலும், காணகில்லா உலகோர்கள் எல்லாம்,
          நண்ணரு க்ஜானம் தலைக்கொண்டு நாரணற்கு ஆகவைத்த அண்ணல் இராமானுசன் !
     42)மாமலராள் நாயகன் எல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கன் என உபதேசித்த  தூயவன் தீதிலா இராமானுசன் !
     43)அறம் சீரும் உறு  கலியைத் துரக்கும்  பெருமை (குடிகொண்ட) இராமானுசன் !
     44)சொல்லார் தமிழ் ஒரு மூன்றும், சுருதிகள் நான்கும், எல்லையில்லா அறநெறி யாவும் தெரிந்தவன் ,எண் அருஞ்சீர் 
           நல்லார் பரவும் இராமானுசன் !
    45)சரண் அன்றி, அப்பேறளித்தற்கு   ஆறொன்றுமில்லை மற்றச் சரணன்றி,  என்று இப்பொருளைத் தேறுமவர்க்கும்
         எனக்கும் உனைத் தந்த செம்மைச் சொல்லால்  கூறும் பரம் அன்று, இராமானுசன் !
    46)கூறும் சமயங்கள் ஆறும் குலையக்   குவலயத்தே மாறன் பணிந்த மறை உணர்ந்தோனை  ;மதியிலியேன் தேறும்படி என் மனம்
          புகுந்தவன் ; திசை அனைத்தும் ஏறும் குணம் இராமானுசன் !
    47)இறைஞ்சப்படும்  பரண் , ஈசன் அரங்கன் என்று இவ்வுலகத்து அறம் செய்யும் அண்ணல் இராமானுசன் !
    48)புன்மையிலோர் பகரும் பெருமை இராமானுசன் !
    49)பூங்கமலத் தேன் நதிபாய் வயல் தென்னரங்கன் கழல் சென்னி வைத்துத் தான் அதில் மன்னும் இராமானுசன் !
    50) பாவு  தொல் சீர் எதித்தலை நாதன் இராமானுசன் !
     51)  அடியைத் தொடர்ந்து எழும் ஐவர்கட்காய்  அன்று  பாரதப் போர்    முடியப் பரி நெடுந்தேர் விடுங்கோனை  முழுதுணர்ந்த
           அடியார்க்கு அமுதம் இராமானுசன்!
    52) பார்த்தான் அறு   சமயங்கள் பதைப்ப ,இப்பார் முழுதும் போர்த்தான் புகழ் கொண்டு புன்மையினேன் இடை த்தான் புகுந்து
          தீர்த்தான் இருவினை ,தீர்த்தரங்கன் செய்ய  தாள் இணையோடு ஆர்த்தான் இராமானுசன் !
    53)என்னை ஆளவந்த கற்பகம்; கற்றவர் காமுறு சீலன்; கருதரிய பற்பல உயிர்களும் பல் உலகு யாவும் பரனதென்னும்
          நற்பொருள் தன்னை இந்நானிலத்தே வந்து நாட்டிய , அற்புதன் செம்மை இராமானுசன் !
    54)நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன; நாரணனைக்  காட்டிய வேதம் களிப்புற்றது; தென் குருகை வள்ளல் வாட்டமிலா வண்தமிழ் மறை
         வாழ்ந்தது; (காரணம்) மண்ணுலகில் ஈட்டிய சீலத்து இராமானுசன் !
    55)கண்டவர் சிந்தை கவரும் கடிபொழில் தென்னரங்கன் தொண்டர் குலாவும் இராமானுசன் !
    56)  கோக்குல மன்னரை மூவெழுகால் ஒருகூர் மழுவால்  போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் , புவனம் எங்கும் ஆக்கிய
           கீர்த்தி       இராமானுசன் !
    57)மற்றொரு பேறு மதியாது அரங்கன் மலரடிக்காள் உற்றவரே தனக்கு உற்றவராகக் கொள்ளும் உத்தமன் ;
          நற்றவர் போற்றும் இராமானுசன் !
    58)பேதையர் வேதப்பொருள் இது என்று உன்னி, பிரமம் நன்று என்று ஓதி, மற்று எல்லா உயிரும் அஹுதென்று,
          உயிர்கள் மெய் விட்டு ஆதிப்  பரனோடு ஒன்றாமென்று  சொல்லும்  அவ் அல்லல் எல்லாம் வாதில் வென்ற மெய்ம்மதிக்கடல்
         இராமானுசன் !
    59)கடலளவாய திசை எட்டின் உள்ளும் கலி இருளே மிடை தரு   காலத்து, மிக்க நான்மறையின் சுடரொளியால் ,
          அவ்விருளைத் துரத்திலநேல் , உயிரை உடையவன், நாரணன் என்று உணர்த்தியவன் இராமானுசன் !
    60)உணர்ந்த மெய்க்ஜானியர்  யோகந்தோறும் திருவாய் மொழியின் மணம் தரும்   இன்னிசை மன்னு  மிடந்தொறும்
          மாமலாராள் புணர்ந்த    பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்கும் குணம் திகழ் கொண்டல் ,குலக்கொழுந்து
         இராமானுசன் !  
    61) அரு முனிவர் தொழும்     தவத்தோன் இராமானுசன்  !
    62)இருவினைப் பாசம் கழற்றி  இன்றி  யான் இறையும்  வருந்தேன்; இனி எம் இராமானுசன் !
    63)அறு சமயச் செடியைத் தொடரும் மருள் செறிந்தோர் சிதைத்து ஓட வந்து , இப் படியைத் தொடரும் இராமானுசன் !
    64)பண்டரு  மாறன் பசுந் தமிழ்  ஆனந்தம்    பாய் மதமாய், விண்டிட வந்த  வேழம் எங்கள் இராமானுசன் !
    65) குற்றமெல்லாம் பதித்த குனத்தினருக்கு அந் நாழற்ற க்ஜானம் தந்த இராமானுசன் !
    66)தன்னை எய்தினர்க்கு ,தன் தகவென்னும் சரண் கொடுத்து, மனத்தில் ஈனம் கடிந்த இராமானுசன் !
     67)உயிர்கட்கு அரண் அமைத்து, கரணமிவை மாயவனுக்கென்று (உரைத்த) இராமானுசன் !
     68)"ஆர்" எனக்கின்று நிகர் சொல்லின்    ,மாயன், அன்று ஐவர்  தெய்வத் தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப்
           பாரினில் சொன்ன      இராமானுசன் !
    69)சரண் என்று, தான் அது தந்த  , எந்தை இராமானுசன் !
     70)என்னையும் பார்த்து, என் இயல்பையும் பார்த்து, எண்ணில்  பல் குணத்து உன்னையும் பார்க்கில் , அருளும் இராமானுசன் !
     71)முன் செய்வினை, நீ செய்வினை அதனால், பேர்ந்தது வண்மை, பெருந்தகை  இராமானுசன் !
     72)நிறை புகழோருடன், என்னை வைத்தனன், இராமானுசன் !
     73)வண்மையினாலும்,உந்தன்  மாதகவாலும், மதிபுரையும் தண்மையினாலும் இத் தரணியோர்கட்குத்  தான் சரணாய்
          உண்மை  நன் க்ஜான  முரைத்த இராமானுசன் !
    74)எழில் மறையில் சேராதவரைச் சிதைப்பது அப்போதொரு சிந்தை செய்தே ஏரார் குணத்து எம் இராமானுசன் !
    75)நின் புகழே வந்து மொய்த்து அலைக்கும், இராமானுசன் !
    76)நின்ற வண்கீர்த்தியும்   நீள் புனலும் நிறை வேங்கடப் பொற்குன்றமும்  வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும்
         உன்றனக்கு எத்தனை இன்பம் தரும் உன் இணை மலர்த்தாள் என்றனக்கும்   இவை ஈந்து    அருளும் இராமானுசன் !
   77) ஈயாத இன்னருள் ஈந்தனன்,என்னில்  பல் பொருளால் மறைக் குறும்பைப் பாய்ந்தனன்;கீர்த்தியினால்  என் வினைகளை 
         வேர் பறியக்  காய்ந்தனன்  வண்மை இராமானுசன் !
   78) கருத்தில் புகுந்து, உள்ளில் கள்ளம் கழற்றிக் கருதரிய வருத்தத்தினால் மிக வஞ்சித்து, நீ, இந்த மண்ணகத்தே திருத்தி,
        திருமகள் கேள்வனுக்கு ஆள் ஆக்கிய இராமானுசன்  !
    79)பொய்யைச் சுரக்கும் பொருளைத் துறந்து இந்தப் பூதலத்தே மெய்யைப் புரக்கும் இராமானுசன் !
    80)நல்லார் பரவும் இராமானுசன் !
    81)சோர்வின்றி  உந்தன் துணை அடிக்கீழ்த் தொண்டு பட்டவர்பால் சார்வின்றி நின்ற எனக்கு  அரங்கன் செய்ய, தாளிணைகள் பேர்வின்றிஇன்று   பெறுத்தும்  இராமானுசன் ! ! 
    82)தெரிவுற்ற க்ஜாலம்  செறியப் பெறாது ,வெந்தீவினையால்  உருவற்ற க்ஜானத்து உழல்கின்ற என்னை, ஒரு பொழுதில்
      பொருவற்ற கேள்வியனாக்கி நின்றான் ,தெரிவுற்ற கீர்த்தி இராமானுசன் !
   83) "சீர் கொண்டு பேரறம் செய்து நல்வீடு செறிதும் "என்னும் பார் கொண்ட மேன்மையர் கூட்டனல்லேன்     ;
         உன்  பாத பங்கயமாம் ஏர் கொண்ட வீட்டை எளிதில் எய்துவன் (அதற்கான)  கார் கொண்ட வண்மை இராமானுசன் !
   84)கண்டு கொண்டேன், தன்னைக்  காண்டலுமே  தொண்டு    கொண்டேன் அவன் தொண்டர் பொற்றாளில் என் தொல்லை வெந்நோய்   விண்டுகொண்டேன் ,அவன் சீர் வெள்ள வாரியை வாய் மடுத்து இன்று உண்டு கொண்டேன் --அவனே இராமானுசன் !
   85)ஓதிய வேதத்தின்  உட்பொருளாய் அதனுச்சி மிக்கசோதியை  நாதனென்று அறியாது உழல்கின்ற,தொண்டர்பேதைமைதீர்த்த   இராமானுசன்  !
   86)பற்றா மனிசரைப் பற்றி    , அப்பற்றி விடாது  அவரை உற்றார் என உழன்றோடி நையேன் இனி   எம்மை ஆளும் பெரியவர் கற்றார் பரவும்   இராமானுசன் !
  87)பெரியவர் பேசிலும், பேதையர் பேசிலும் தன் குணங் கட்கு உரிய   சொல் என்றும் உடையவன் என்றென்று உணர்வில் மிக்கோர் தெரியும்
        வண்கீர்த்தி இராமானுசன் !
   88)கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமான் ,ஒலி மிக்க பாடலை உண்டு தன் உள்ளம் தடித்து ,அதனால் வலி மிக்க சீயம்    இராமானுசன் !
   89)போற்ற அரும் சீலத்து இராமானுசன் !
   90)நினையார் பிறவியை நீக்கும் பிரான் ; இந்நீணிலத்தே எனை ஆளவந்த இராமானுசன் !
   91)மருள் சுரந்து, ஆகம வேதியர் கூறும் அவப்பொருளாம் இருள் சுரந்து எய்த்த உலகு இருள் நீங்க, தன் ஈண்டிய சீர் அருள் சுரந்து எல்லா
      உயிர்கட்கும் நாதன்----அரங்கன்  என்னும் பொருள் சுரந்தான் எம் இராமானுசன் !
  92)புண்ணிய நோம்பு புரிந்துமிலேன்; அடி போற்றி  செய்யும் நுண்ணருங்கேள்வி   நுவன்றுமிலேன்; இன்று என் கண்ணுள்ளும், நெஞ்சுள்ளும்
      புகுந்து நின்ற எண்ணருங்கீர்த்தி இராமானுசன்  !
  93)கட்டப் பொருளை மறை பொருள் என்று , கயவர் சொல்லும் பெட்டைக் கெடுக்கும் பிரான் அல்லனே, என் பெரு வினையைக் கிட்டிக்   கிழங்கொடு தன்னருள் என்னும் ஒள் வாள் உருவி  வெட்டிக் களைந்த இராமானுசன் !
  94) தவந் தரும், செல்வம் தகவும் சலியாப் பிறவிப் பவந்தரும் தீவினை பாற்றித் தரும் பரந்தாமமென்னும் திவந்தரும் (அதன் நாமம் )
      தீதில்  இராமானுசன் !
  95)உள் நின்று உயிர் கட்கு உற்றனவே செய்து அவர்க்குயவே பண்ணும் பரனும், பரிவு இலன் ஆம் படி , பல்லுயிர்க்கும் விண்ணின் தலை நின்று,
      வீடளிப்பான், எம் இராமானுசன் !
 96)வளரும் பிணி கொண்ட வல்வினையால், மிக்க நல் வினையில் கிளரும் துணிவு கிடைத்தறியாது    முடைத் தலை ஊன்     தளருமளவும்
     தரித்தும், விழுந்தும்  தனி திரிவேற்கு உளர் , ஏற்றவர், இறைவர் இராமானுசர் !
 97)தன்னை உற்று ஆள் செய்யும் தன்மையினோர்மண்ணு  தாமரைத் தாள்  தன்னை உற்று  ஆள் செய்ய  , இன்று என்னை உய்த்தான் தன் தகவால்        தன்னை உற்றார் அன்றி  தன்மை உற்றார் இல்லை என்று அறிந்து தன்னை உற்றாரைச் சாற்றும் குணத்தான் இராமானுசன் !
98 )இடுமே இனிய சுவர்க்கத்தில், இன்னம் நரகலிட்டுச் சுடுமே அவற்றைத்  தொடர் தொல்லைச் சுழல்  பிறப்பில் நாடுமே , நம்மை நம்
      வசத்தே   விடும் ( அவனைச் ) சரணமென்றால், ( அவன் ) இராமானுசன் !
99)தர்க்கச் சமணரும், சாக்கியர் பேய்களும் தாழ் சடையோன் சொற்கற்ற   சோம்பரும்,  சூனிய வாதரும் , நான் மறையும் நிற்கக் குறும்பு செய்
     நீசரும்,  நீணிலத்தே மாண்டனர். ---(எப்போது )பொற் கற்பகம் போந்தபின் ( அவரே ) இராமானுசர்!
100)என் நெஞ்சம் என்னும் பொன்வண்டு, உனதடிப் போதில் ஒண் சீர்  ஆம் தெளி தேன் உண்டு, அமர்ந்திட வேண்டி, நின் பால் போந்தது
        அதுவே ஈந்திட வேண்டும் ( வேண்டியது கொடுக்கும் )  இராமானுசன் !
101)மயக்கும் இருவினை வல்லியில் பூண்டு, மதி மயங்கித் துயக்கும் பிறவியில் தோன்றிய என்னைத் துயர் அகற்றி உயக் கொண்டு
        நல்கும் இராமானுசன் !
102)நையும் மனம் உன்  குணங்களை உன்னி , என் நா இருந்து (உனை அழைக்கும் ) எம் ஐயன் இராமானுசன் !
103)என் தன் மெய் வினை நோய் களைந்துகையில் கனி  என்னவே க்ஜானம் அளித்தனன்  இராமானுசன் !
104)உன் தன் மெய்யில் பிறங்கிய  சீர் அன்றி நிரயத் தொய்யில்  கிடக்கிலும் சோதி விண் சேரிலும்  ---இவ்வருள்  செய்யும் இராமானுசன் ! 
105)செழுந்திரைப் பாற்கடல்  கண் துயில் மாயன்  திருவடிக்கீழ் விழுந்திருப்பார்  நெஞ்சில் மேவுநன் கஜானி ,நல் வேதியர்கள் தொழும்
         திருப்பாதன் இராமானுசன் ! 
106)இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம்  மாலிருஞ்சோலை என்னும் பொருப்பிடம்மாயனுக்கு என்பர் நல்லோர் , அவை தன்னோடு வந்து
        மாயன் இருப்பிடம்  மனம்-----(அது) இராமானுசன் !
107) என்றும் எவ்விடத்தும் என்புற்ற நோயுடல் தோரும் பிறந்து இறந்து  எண்ணரிய  துன்புற்று  வீயினும் சொல்லுவது ஒன்று உண்டு ;
         உன்   தொண்டர்கட்கே அன்புற்று இருக்கும்படி என்னை ஆக்கி, அங்கு ஆட்படுத்தும் இன்புற சீலத்து இராமானுசன் !
108)பக்தி எல்லாம் தங்கியது என்ன நம் தலைமிசை ,  பொங்கிய கீர்த்தி இராமானுசன் அடிப் பூ மன்ன, அங்கயல் பாய் வயல்
       தென்னரங்கன் அணி ஆக மன்னும் பங்கய மாமலர்ப் பாவையைப் போற்றுதும்
குறிப்பு:--அடைப்புக்குறியில் உள்ள சொற்கள் அடியேன் சொன்னவை
----------------------------------------------------------

              ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
        எம்பெருமானார் திருவடிகளே சரணம்
        திருவரங்கத்தமுதனார்  திருவடிகளே சரணம்
  சீரார்  தூப்புல் திருவேங்கடமுடையான்  திருவடிகளே சரணம்

Sarvam Sree Hayagreeva Preeyathaam
Dasan
Uruppattur Soundararajan

Sunday, April 22, 2012

ஸ்வாமி ராமானுஜர் திருமஞ்சனம்

ஸ்வாமி ராமானுஜர் திருமஞ்சனம்
         Video upload - Bhagavat rAmAnujar     
Posted by:      "Vasu Devan"            vasu.d@comcast.net                                       vasu_52        
      Sat Apr 21, 2012 10:33 pm        (PDT)   

ஸ்ரீ:

ஸ்ரீமதே கோபாலதேசிக மஹாதேசிகாய நம:
ஸ்ரீமதே ரகுவீர மஹாதேசிகாய நம:


Dear bhAgavatAs,

ஸ்ரீ பகவத் ராமாநுஜ ஜயந்தீ is coming up in a few days.

Here is an amazing anubhavam with a captivating collage of video and audio clips.

இங்கு, ஸ்வாமி எம்பெருமானாரின் திருஅவதார ஸ்தலத்தையும், திருநடை அழகையும், திருமஞ்சனத்தையும், திருமேனி லாவண்யம் & சௌந்தரியத்தையும், திருஅவயவ ப்ரபாவத்தையும், நாம் தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதுமாக பருகி, பருகி உஜ்ஜீவனம் அடைகின்றோம்!

Link:

http://www.youtube.com/watch?v=1nmcxb90bzY

Enjoy!

aDiyEn rAmAnuja dAsan

Friday, April 13, 2012

பங்குனி உத்திரம்-சேர்த்தி-ஏலகிரி

பங்குனி உத்திரம்-சேர்த்தி-ஏலகிரி:
Posted by:      "Padmanabhan Ns"            aazhwar@gmail.com                                       aazhwar        
      Thu Apr 12, 2012 7:02 pm        (PDT)   

      SrI:
Dera Swamy,
Thanks to Sri Kaliyan Ponnadi for the contribution - This is written very
nicely. Has it appeared in Vanamamalai and Ramanuja lists?
dasan
(05-04-2012 பங்குனி உத்திரத்திருநாளன்று ஏலகிரி சன்னிதியில் நடந்தேறிய
கலகத்தால் ஊரே ஸ்தம்பித்துப் போனது. கலகத்தின் காரணத்தையும், பிண்ணனித்
தகவல்களையும் ஏலகிரியப்பன் மற்றும் ஏலகிரித் தாயாருக்கிடையே அன்று நடைபெற்ற
உரையாடலைக் கொண்டு அறிந்து கொள்ளலாம்.)
ஸ்ரீ ஏலசரோவரப் பெருமாள் திருவாய் மலர்ந்தருளிய விஷயம்
ஏலகிரி நாச்சியாராகிய உன்னை நாடி, வந்திருக்கின்றேன். நான் கொண்டு வந்த
மாலையை ஏற்றுக் கொண்டு, என்னையும் உள்ளே அனுமதிக்க வேண்டும்.
ஸ்ரீ ஏலகிரித்தாயார் திருவாய் மலர்ந்தருளிய விஷயம்
முந்தாநாள் இந்நேரத்தில் தேவரீர் ஏலசரோவரப்பொய்கைக்கு எழுந்தருளி,
வேட்டையாடி விட்டு, வேர்த்துப் பசித்து வயிரசைத்து வந்தீர்!... உத்தம
நாயகியானவள் கணவனின் வியர்வை மணத்தையே விரும்பியிருப்பாள். ஆதலால்
அடியேனும் அதீதப் ப்ரீதியுடன் தங்களை எதிர்கொண்டழைத்து, திருக்கை
பிடித்து, உள்ளே எழுந்தருளப் பண்ணிக் கொண்டு போய், மங்கள ஆரத்தி
கண்டருளப் பண்ணி, சீரிய சிங்காதனத்தே உம்மை எழுந்தருளப் பண்ணி, திருவடி
விளக்கி, திருவொத்தாடை சாத்தி, கண்ணும் கருத்துமாய் திருவாலவட்டம்
பரிமாறி, பின்பு மஞ்சளும் செங்கழுநீரின் வாசிகையும், நாறுசாந்தும்,
அஞ்சனமும் கொண்டு தங்களை நீராட்டத்துக்கு அழைக்க - தேவரீரோ!...
நீராட்டத்துக்கு எழுந்தருளினாலும், பிற்பாடு பாதி திருமஞ்சனத்தில் எழுந்து
விட்டீர். சரி பரவாயில்லையென்று - திருவரைக்கு பீதாம்பரம் எடுத்துக்
கொடுத்தாலோ! அதையும் தாறுமாறாய்ச் சாத்திக் கொண்டீர்...
எப்போதும் மிகுந்த சிரத்தையுடன் திருமண் காப்பிட்டுக் கொள்ளும் தேவரீர்,
அன்று மட்டும் வேறு மாதிரி, கோணல் மாணலுடன் நெற்றியில் திருமண்
காப்பிட்டுக் கொண்டீர்.... சரி போகட்டும் என்று, அப்பம் கலந்த
சிற்றுண்டி, அக்காரம் பாலில் கலந்து சமர்ப்பிக்க அதனை ஒரு சிறிதளவே அமுது
செய்திட்டீர்!....
வஞ்சகக் கள்வரே!.... தாங்கள் திருவனந்தாழ்வானாகிய படுக்கையில்
சயனித்திருக்கையில், அடியேன் தங்கள் திருவடி நிலைகளை வருடியபடி தங்களை
திருக்கண் வளரச் செய்து வருகையில், நீர் ஒரு மாயம் செய்து, அடியேனுக்கு
நித்திரை உண்டாக்கி, திருக்கருவூலத்தைத் திறந்து. எம்முடைய ஸ்த்ரீதனம்,
திரு அம்மானை, பந்து, கழஞ்சு, பீதாம்பரம் எல்லாம் திருடிக் கொண்டு எங்கோ
போய் விட்டீர்... இரண்டு நாட்களுக்குப் பின் இப்போது தான் இங்கு
எழுந்தருள்கிறீர்..... ஏரார்ந்த ஏலகிரிமலையில் எம் பந்துக்களாகிய
இம்மலைமக்கள் புடை சூழ இங்கிருக்கும் போதே எனக்கு இந்தக் கதி என்றால்
உம்மோடு வைகுந்தத்துக்குத் தனிக்குடித்தனம் வந்தால் என் கதி
என்னாகும்?..... நீங்கள் வந்த வழியே திரும்பிப் போகலாம்.
(பேச்சோடு பேச்சாக வெண்ணெய், புஷ்பம், தயிர், பழம் இவற்றை ஏலசரோவரப்
பெருமாள் மேல் எறிந்து தாயார் கோஷ்டியினர் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்த
வண்ணம் இருந்தார்கள். அவ்வப்போது தாயார் சன்னிதியின் திருக்கதவங்களை ஒங்கி
அறிந்து சாத்தி மேலும் ஏலகிரியப்பனை சோதனைக்கு ஆளாக்கினார்கள்)
ஸ்ரீ ஏலசரோவரப் பெருமாள் கூறியது
ஏலகிரி நாயகியே! நான் மண்ணாசை கொண்டு மண்ணை அளந்தது அப்போது.......
ஆனால் "அல்லிமாதர் புல்க நின்ற ஆயிரந் தோளனிடம்" என்றபடி, உன்னை ஆலிங்கனம்
செய்து கொள்ளும் பொருட்டு ஆயிரம் தோள்களை எடுத்துக் கொண்டு
பெண்ணாசையோடு வந்திருக்கின்றேன் இப்போது..... எனவே நான் கொண்டு வந்த
மாலையை ஏற்றுக் கொண்டு, என்னையும் உள்ளே அனுமதிக்க வேண்டும்.
ஸ்ரீ ஏலகிரித் தாயார் கூறியது
இந்தப் பெண்ணாசையால் தான் பிரச்சினை இப்போது முளைத்திருக்கிறது
ஸ்வாமி...... ராணித்தேனீயைப் பிற தேனீக்கள் மொய்த்துக் கொண்டிருப்பதைப்
போல், வைகுந்தத்தில் புருஷோத்தமனாகிய உம்மை நித்யர்களும், முத்தர்களும்
மொய்த்துக் கொண்டிருந்து கெடுத்தே விட்டிருக்கின்றார்கள்... ஆகவே
பெண்ணாசை மிகுதியால் தான் திருக்கச்சணிப் பொன்முலையாள் அவளைக் காணச்
சென்றீரோ!.... உம் திருக்கனிவாயமுதத்தை அவளுக்குக் கொடுத்தும், அவளது
நகக்குறிகள் உம்மீது அழுந்திப் பதியும் வண்ணம் விளையாடி மகிழ்ந்தீரோ!....
"நின்னைப் பிரியேன்... பிரியிலும் தரியேன்... என்று அவளிடத்தும் ஆசை
வார்த்தைகள் பயின்றீரோ!.... உமது கார்மேனியிலே பசுமஞ்சள் பூக்கக் காரணம்
என்ன?... கரும்புத் தோட்டத்தில் விருப்பம் போல் சஞ்சரித்து விட்டு வந்த
மாமத யானையே.....நீர் வந்த வழியே திரும்பிப் போகலாம்.
ஸ்ரீ ஏலசரோவரப் பெருமாள் கூறியது
நாயகியே.. சந்தேகம் பெண்களுக்குக் கூடப் பிறந்த வியாதி....அந்தச் சந்தேக
மிகுதியால் வெண்ணெய், புஷ்பம், தயிர், பழம் இவற்றை எறிந்து, ஒருநாளும்
பண்ணத் துணியா அவமானங்கள் தனை இன்று எனக்கு இழைத்திட்டாய்.... எல்லாம் இந்த
நம்பெருமாளால் வந்த வினை. இரண்டு பக்கமும் அரண்களாய் ஆறுகள்
அமைந்திருந்தும், அதையும் தாண்டி உறையூர் சென்று மச்சினியுடன் உறவாடி
வந்ததால், எல்லோரும் அப்படியே இருந்து விடுவார்கள் என்று தப்புக் கணக்கு
போட்டு விட்டாய் தேவி..... உன்னைக் கைக் கொண்ட நாள் முதலாய் ஏலகிரிமலையை
மறந்தும் நான் தாண்டியதில்லை. மலையடிவாரத்தில் வாணியம்பாடி என்றொரு ஊர்
இருப்பதாக பேசிக் கொள்கிறார்கள்..... எனக்கு ஆனால் வாணியம்பாடி என்றால்
என்னவென்றே தெரியாது... வைகுந்த வான் போகத்தையும் உன் பொருட்டு
விட்டொழித்தேன்... எனவே நான் கொண்டு வந்த மாலையை ஏற்றுக் கொண்டு,
என்னையும் உள்ளே அனுமதிக்க வேண்டும்.
ஸ்ரீ ஏலகிரித் தாயார் கூறியது
மலையைத் தாண்டி அறியாத மகராசனாகிய நீர், இரண்டு நாள் கழித்து இவ்விடம்
திரும்ப வேண்டிய காரணம் என்ன?..
ஸ்ரீ ஏலசரோவரப் பெருமாள் கூறியது
நாச்சியே! அப்படிப் பொறுமையாகக் கேட்டால், நடந்த விஷயங்களை உனக்கு
எடுத்துச் சொல்லி உன் சந்தேகத்தைத் தீர்த்து விடப் போகிறேன்....
முந்தாநாள் இரவு திருமங்கை என்றொரு கள்வன் இம்மலைக்கு வரப் போவதாகக்
கேள்விப் பட்டேன்....
ஸ்ரீ ஏலகிரித் தாயார் கூறியது
அது எப்படி உமக்குத் தெரியும்?.. யார் இந்த விஷயத்தை உம்மிடம்
சொன்னார்கள்?...
ஸ்ரீ ஏலசரோவரப் பெருமாள் கூறியது
தேவி.....பாம்பின் கால் பாம்பறியும்..... எனவே அந்தக் கள்வனிடமிருந்து
நமது கருவூலத்தைக் காத்துக் கொள்ள, திருவாபரணங்களை எடுத்துக் கொண்டு
இரவோடு இரவாகப் புறப்பட்டேன். ஆனால் அந்தப் பாவியோ! அதனை எப்படியோ
மோப்பம் பிடித்து வழியிலேயே என்னை மடக்கி விட்டான். என்னை மிரட்டித்
திருவாபரணங்களை என்னிடமிருந்து பறித்துக் கொண்டான். பிற்பாடு திருமந்திர
உபதேசம் பண்ணி, அந்தப் பாவியைத் திருத்திப் பணிகொண்டு, மீண்டும்
திருவாபரணங்களை அவனிடமிருந்து மீட்டுக் கொண்டு புறப்பட்டேன். உன்னுடனான
சகவாச தோஷத்தால் சந்தேகம் என்னைச் சூழ்ந்து கொள்ள, வழியிலேயே
அத்திருவாபரணங்களைக் கணக்கிட்டுப் பார்த்தேன். நான் நினைத்தது போலவே
கணையாழி ஒன்று காணாமல் போயிருந்தது.... "கணையாழியை யாரோ ஒருத்திக்குப்
பரிசளித்து விட்டதாக நீ நினைத்து விட்டால் என்ன செய்வது...?" என்ற பயம்
ஒருபுறம்...அதே நேரத்தில் திருமந்திரத்தால் திருந்திய திருமங்கையை இது
குறித்து அடியேன் கேட்கப் போக, அவன் குற்றமிழைக்காத பட்சத்தில் இந்த
சந்தேகக் கேள்வி அவன் மனத்தை என்ன பாடு படுத்தும்? - என்ற சங்கடம்
ஒருபுறம்.. எனவே ஏலகிரிமலையின் திருவீதிகளெங்கும் கணையாழியைத் தேடித்
திரிந்தேன்.... ஒரு வழியாய் அதனைக் கண்டெடுப்பதற்குள் ஒரு நாள் பொழுது
கழிந்து விட்டது.
ஒருவழியாய் கணையாழியைக் கொண்டு திரும்புகையில், பாரிஜாத மலர்களையெல்லாம்
கொண்டு வந்து திருத்தேவதைகள் என்னைச் சேவிக்க வந்தனர். அவர்களின் தலையில்
நான் அந்த மலர்களைச் சூட்ட வேண்டுமென்று நிர்ப்பந்தித்தனர். நானும்
ஒருநாளும் பெண்டுகள் தலையில் மலர்களைச் சூட்டியதில்லை என்ற உண்மையை
எடுத்துக் கூறி, ஒரு வழியாக அவர்களிடமிருந்து மீண்டு வருவதற்குள் இன்னொரு
நாள் கடந்து விட்டது.
ஸ்ரீ ஏலகிரித் தாயார் கூறியது
போதும் நிறுத்தும் உமது கதையை.... நீர் திருமகளாம் எமது சன்னிதியை நாடி
வந்தது மெய்யானால் உமது திருக்கண்மலர்கள் இரண்டு சிவந்தே இருப்பானேன்?
முதலில் அதற்கு நீர் பதில் சொல்லும்....?
ஸ்ரீ ஏலசரோவரப் பெருமாள் கூறியது
செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் நாம் ஆனபடியால், இரவெல்லாம்
நித்திரையின்றிக் கண் விழித்து, திருக்குதிரைத் தம்பிரான் மேல்
ஆரோகணித்து, உலகைப் பரிபாலனம் செய்கின்றேன்.... பாகவதர் பக்கம் எமது
கண்கள் தண்ணளியோடு காருண்யத்தால் சிவக்கும்... பாகவத விரோதிகள் பக்கம்
சீற்றத்த்தால் எம் கண்கள் சிவக்கும் தேவி.....
ஸ்ரீ ஏலகிரித் தாயார் கூறியது
போதும் நிறுத்தும் உமது கதையை.... நீர் திருமகளாம் எமது சன்னிதியை நாடி
வந்தது மெய்யானால் உமது திருக்குழற் கற்றைகள் எல்லாம் இப்படிக் கலைந்தே
இருப்பானேன்?
ஸ்ரீ ஏலசரோவரப் பெருமாள் கூறியது
தேவி.... ஏலகிரி சிகரத்தில் வீசிய பெருங்காற்றே இதற்குக் காரணம்.....
ஸ்ரீ ஏலகிரித் தாயார் கூறியது
போதும் நிறுத்தும் உமது கதையை.... நீர் திருமகளாம் எமது சன்னிதியை நாடி
வந்தது மெய்யானால் திருக்கஸ்தூரித் திருமண் காப்புக் கரைந்தே
இருப்பானேன்....
ஸ்ரீ ஏலசரோவரப் பெருமாள் கூறியது
தேவி..... நீ என் மேல் இருக்கும் பரிவினால், கஸ்தூரி திலகத்தின் மீது லலாட
பதக்கத்தையும் அணிவித்து விடுகின்றாய்... பின்பு திருக்கஸ்தூரித் திருமண்
காப்புக் கரையாமல் என்ன செய்யும்?
ஸ்ரீ ஏலகிரித் தாயார் கூறியது
போதும் நிறுத்தும் உமது கதையை.... நீர் திருமகளாம் எமது சன்னிதியை நாடி
வந்தது மெய்யானால் திருப்பவளம் போல் சிவந்த அதரம் வெளுத்தே இருப்பானேன்?..
ஸ்ரீ ஏலசரோவரப் பெருமாள் கூறியது
தேவி.... பாஞ்சஜன்யத்தை ஊதி, ஊதி திருப்பவளம் வெளுத்து விட்டதே அன்றி
வேறொன்றும் காரணமில்லை...
ஸ்ரீ ஏலகிரித் தாயார் கூறியது
போதும் நிறுத்தும் உமது கதையை.... நீர் திருமகளாம் எமது சன்னிதியை நாடி
வந்தது மெய்யானால் திருக்கழுத்தெல்லாம் நகக்குறிகள் அவை நிறைந்தே
இருப்பானேன்...?
ஸ்ரீ ஏலசரோவரப் பெருமாள் கூறியது
தேவி... ஏலகிரிக்காடுகளில் நிறைந்திருக்கும் முள்ளால் வந்த பிரச்சினை
அது....
ஸ்ரீ ஏலகிரித் தாயார் கூறியது
போதும் நிறுத்தும் உமது கதையை.... நீர் திருமகளாம் எமது சன்னிதியை நாடி
வந்தது மெய்யானால் திருமேனியிலே எங்கும் குங்குமப் பொடிகள்
இருப்பானேன்?...
ஸ்ரீ ஏலசரோவரப் பெருமாள் கூறியது
தேவி... அவை திருத்தேவதைகள் கொண்டு வந்த பாரிஜாத மலர்களில் நிறைந்திருந்த
மரகதப் பொடிகளே அன்றி, குங்குமப் பொடி அன்று....
ஸ்ரீ ஏலகிரித் தாயார் கூறியது
போதும் நிறுத்தும் உமது கதையை.... நீர் திருமகளாம் எமது சன்னிதியை நாடி
வந்தது மெய்யானால் திருப்பரியட்டம் மஞ்சள் நிறம் கொண்டு இருப்பானேன்...?
ஸ்ரீ ஏலசரோவரப் பெருமாள் கூறியது
தேவி... அது திவ்ய பீதாம்பர தேஜஸ்ஸால் விளைந்தது என்பதை மறந்தனையோ.....
ஸ்ரீ ஏலகிரித் தாயார் கூறியது
போதும் நிறுத்தும் உமது கதையை.... நீர் திருமகளாம் எமது சன்னிதியை நாடி
வந்தது மெய்யானால் திருவடிகள் அவை செம்மஞ்சள் குழம்பாகவே இருப்பானேன்?...
ஸ்ரீ ஏலசரோவரப் பெருமாள் கூறியது
தேவி.... அது திருக்குதிரைத் தம்பியாரால் விளைந்ததே அன்றி நான் என்ன
செம்மஞ்சள் குழம்பெடுத்துப் பூசிக் கொண்டேனோ.... நாயகியே.... நான்
சொல்லுவதெல்லாம் உண்மை... எனவே திருக்கடல் தனில் மூழ்கி வேண்டுமானாலும்
உனக்கு சத்தியப் பிரமாணம் செய்து தருகிறேன்.....
ஸ்ரீ ஏலகிரித் தாயார் கூறியது
முன்னம் ஒருநாள் ஊழிக்காலத்தில் இப்பிரபஞ்சமே பிரளய வெள்ளத்தில் மூழ்கித்
தத்தளித்த போது, நீர் ஓர் ஆல இலையை மிதக்க விட்டு அதில் திருக்கண்
வளர்ந்தீர்... அப்படிப்பட்ட உமக்கு கடலில் மூழ்கிடல் அருஞ்செயலோ....?
ஸ்ரீ ஏலசரோவரப் பெருமாள் கூறியது
நாயகியே.... நான் சொல்லுவதெல்லாம் உண்மை... எனவே அக்கினிப் பிரவேசம்
செய்தாகிலும், உனக்கு சத்தியப் பிரமாணம் செய்து தருகிறேன்.....
ஸ்ரீ ஏலகிரித் தாயார் கூறியது
அக்காலத்திலே நான்முகனுக்காய் உத்தர வேதியிலே அக்கினியில் ஆவிர்பவித்திட்ட
பேர்ருளாளனாய்த் திகழ்ந்திட்டீர்.... உம்மை அக்கினியும் சுடுமோ? யாரை
நம்பச் சொல்கின்றீர் இதனை.....
ஸ்ரீ ஏலசரோவரப் பெருமாள் கூறியது
நாயகியே.... நான் சொல்லுவதெல்லாம் உண்மை... எனவே திருப்பாம்புக்குடம்
அதனில் கைவிட்டு உனக்கு சத்தியப் பிரமாணம் செய்து தருகிறேன்.....
ஸ்ரீ ஏலகிரித் தாயார் கூறியது
சென்றால் குடையாம்... இருந்தால் சிங்காசனமாம்... என்று எப்போதும்
திருவனந்தாழ்வான் மேல் கண் வளரும் தேவரீர் திருப்பாம்புக் குடத்தில்
கைவிடுவதை அரிதான செயலென்று யாரும் நம்ப மாட்டார்கள்...
ஸ்ரீ ஏலசரோவரப் பெருமாள் கூறியது
நாயகியே.... நான் சொல்லுவதெல்லாம் உண்மை... எனவே மழுவை ஏந்தி
வேண்டுமானாலும் உனக்கு சத்தியப் பிரமாணம் செய்து தருகிறேன்.....
ஸ்ரீ ஏலகிரித் தாயார் கூறியது
ஒருகோடி சூரியன் உதித்த பிரபை போல் விளங்கும் திருவாழியினைத்
திருக்கரத்திலே தரித்துக் கொண்டுள்ள உமக்கு, இரும்பின் மழுவை ஏந்துதல் ஒரு
பொருட்டோ.....
ஸ்ரீ ஏலசரோவரப் பெருமாள் கூறியது
நாயகியே.... நான் சொல்லுவதெல்லாம் உண்மை... எனவே திருநெய்க்குடத்தில்
கைவிட்டு வேண்டுமானாலும் உனக்கு சத்தியப் பிரமாணம் செய்து தருகிறேன்.....
ஸ்ரீ ஏலகிரித் தாயார் கூறியது
கிருஷ்ணாவதார காலத்தில் ஐந்து லட்சம் பூர்வகுடிகளிடமும் வெண்ணெய் திருடி
உண்டு மகிழ்ந்த உமக்கு, திருநெய்க்குடத்தில் கைவிட்டே திருடுதல் ஒரு
அருஞ்செயலோ!..... மாயனே.. இவ்வுலகத்தார் பரிகசிக்கும் அளவுக்கு பல்வேறு
ப்ரமாணங்களை அருளினீர்... போதும்... இனி உமது மனத்துக்கியைந்த
இடத்துக்குச் சென்றங்கே பெருமகிழ்வோடு எழுந்தருள்வீர்......
அருளாழி வரிவண்டும், ஜெகதாசார்யனும் ஆகிய பகவத்ராமாநுஜர் ஏரார்ந்த
ஏலகிரியில் எழுந்தருளி நின்றதால் ஒரு வழியாக இந்தக் கலகம் முடிவுக்கு
வந்தது. ஸ்ரீ ராமாநுஜர் கூறுகிறார்.
அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது. அப்படியே மானிடராய்ப்
பிறந்தாலும் எல்லாவுலகும் படைத்தளித்துக் காக்கும் ஸ்ரீஏலகிரித்தாயார் ஸமேத
கல்யாண வேங்கட ரமண ஸ்வாமியிடம் பக்தி பூணுதல் அதனிலும் அரிது. அப்படியே
வண்புகழ் நாரணன் திண்புகழ் பாடி வழிபட்டாலும், அவனிடம் தாழ்ந்த பலன்களை
வேண்டிப் பெறாமல், மிக உயர்ந்த பலனாகிய மோக்ஷ சாம்ராஜ்யத்தை வேண்டிப்
பெறுதல் அதனிலும் அரிது... அப்படியே உயர்ந்த பலனாகிய மோக்ஷத்தையே
விரும்பியிருந்தாலும், கர்ம - ஞான - பக்தி மார்க்கங்களாகிய தன்முயற்சியை
அதற்கு உபாயமாகக் கொள்ளுகிறார்களே அன்றி, "நெறிகாட்டி நீக்குதியோ!" என்று
ஆழ்வார் அருளிச் செய்தபடி, ப்ரபத்தி ஆகிய சரணாகதி மார்க்கத்தை உபாயமாகப்
பற்றுதல் அதனிலும் அரிது.
இப்படி அரிதிலும் அரிதான ப்ரபத்தி செய்ய உகந்த முகூர்த்தம் ஸ்ரீஏலசரோவரப்
பெருமாள், ஸ்ரீ ஏலசரோவரமங்கை நாச்சியாருடன் சேர்த்தியுடன் இருக்கும் காலமே
- என்பதை சேதனர்கள் அனைவரும் தத்தமது ஆசார்யன் வாயிலாக அறிந்து கொண்டு,
பங்குனி உத்திரத் திருநாளாகிய இன்று சரணாகதி பண்ணுகைக்காக இங்கே
கூடியிருக்க, திவ்யதம்பதியாகிய தாங்கள் இருவரும் இந்த மலைமீதும் தங்கள்
தங்கள் திவ்ய சேஷ்டிதங்களைத் தொடரவே செய்கிறீர்கள். எனவே ஊடலை விடுத்து,
"திருமறுமார்பன் - திருவுக்கிருப்பிடம் - திருவின் நாயகன் - திருவாளர்
தலைவன் - திருவையளிப்போன் - திருவுக்கும் திரு - திருமகள் கொழுநன் -
திருவின் பெட்டகம் - திருப்புகழாளன் - திருவை தரிப்போன் - திருவுடன்
பிறப்போன் - திருவை உடையோன்" என்றெல்லாம் அடியோங்கள் கொண்டாடும் படி,
தாங்கள் இருவரும் சேர்த்தி மஹோத்ஸவம் கண்டருள வேண்டும் என்று
ப்ரார்த்தித்துக் கொள்கிறேன்.
ஆசார்யனின் வேண்டுகோளை ஏற்று, ஏலகிரித் தாயாரும் "போனால் போகட்டும் -
ஏலகிரியப்பனாகிய நம் ஸ்வாமியை வரச்சொல்லுங்கள்" - என்று ஆணையிட,
ஏலகிரியப்பனும் பெருகுமதவேழம் மாப்பிடிக்கு முன் நிற்பது போலே தாயார்
சன்னிதி முன்பாக எழுந்தருளி நின்றார். ஏலகிரியப்பன், ஏலசரோவரப் பெருமாள்
சேர்த்தி கண்டு பாகவதோத்தமர்கள் பெரும் ஆரவாரமிட்டார்கள். திவ்ய
தம்பதிக்கு சேர்த்தித் திருமஞ்சனம் நடந்தேறியது. அடியார்களும்,
ஏலகிரிமலையின் சிறுமாமனிசர்களும் இணைந்து "கத்யத்ரயம்" சேவித்து
எம்பெருமானைச் சரண் பற்றினார்கள். தொடர்ந்து திவ்யதம்பதிகளின்
திருக்கல்யாண மஹோத்ஸவம் இனிதே நடந்தேறியது

Tuesday, April 10, 2012

Srimad Rahasya santhesa vyakyanam


         Srimad Rahasya santhesa vyakyanam      Posted by:      "T.Raguveeradayal"            rajamragu@gmail.com                                       thiruthiruragu        
      Mon Apr 9, 2012 8:35 pm        (PDT)   

      adiyen dasasya vignaapanam.
"மும்மறைத் தெளிவுப்பொருண் மூதுரை மாலை" is a booklet released by the
erstwhile Thiruvallikkeni Tamil Sangam on 14-4-1952. It is actually a
commentary by Sri *Chetlur Narasimmachariar* for Swami Desikan's Srimad
Rahasya santhesam, and srimad rahasya santhesa vivaranam . It is in very
simple Tamil.
Interested may either read on line or download it from here
http://www.scribd.com/fullscreen/88618030?access_key=key-myr66ipn4xq3uy2oi81
*adiyen,*
*dasan,
**T. Raguveeradayal
C/O SRIRANGAM SRIMAD
ANDAVAN ASHRAMAM,
THIRUPPULLANI 623532
04567-254242//919443301091
http://thiruppul.blogspot.com
http://thiruthiru.wordpress.com <http://rajamragu.spaces.live.com>***
*http://rajamragu.wordpress.com*
*