Friday, October 21, 2011

வைணவ துணுக்குகள்

வைணவ துணுக்குகள்
_______________________

Fri, Oct 21, 2011 
_______________________     

         Re: TITBITS     
Posted by:      "VS"            yennappan@computer.net                                       sadagopan10510        
      Thu Oct 20, 2011 12:46 pm        (PDT)   

      SrI:
Thank you Sriman Sampath Swamy for your mail on Tattvams by Swamy NammAzhwAr !
The Eikya KaNDyam between the dhivya Prabhandhams and Sanskrit Vedams is incredible .
NamO Sri NrisimhAya,
V.Saddagopan
From: Nochalur Seshadri Sampath
Sent: Wednesday, October 19, 2011 2:16 PM
To: sadagopan
Subject: TITBITS
டியர் டாக்டர் சடகோபன் ஸ்வாமின்,
தத்துவங்கள் எத்தனை ? உடனே கூறுவார் (நம்) ஆழ்வார். அந்த பாசுரம் பார்ப்போமா.
மங்கவொட்டு உன் மாமாயை திருமாலிருன்சோலை மேய
நாங்கள் கோனே யானே நீயாகி என்னை அளித்தானே
பொங்கைம்புலனும் பொரிஐந்தும் கருமேந்திரியம்   ஐம்பூதம்
இங்கு இவ்வுயிரேய் ப்ரிக்ரிதி மானங்கார மனங்களே ..................௧௦ ௭ ௧௦
சப்தாதி விஷயங்கள் ஐந்தும் + அவற்றில் அகப்பட்டு உழலும் ஞானேந்த்ரியங்கள் ஐந்தும் +
அதை அனுபவிக்கும் கருமேந்திரியங்கள் ஐந்தும் + சரீரத்திற்கு முக்யமான பூதங்கள் ஐந்தும் +
மூலப்ரிக்ருதி ஒன்றும் + வ்யவசாய ஹேதுவான மகான் ஒன்றும் + அஹங்காரம் ஒன்றும் +
சங்கல்ப ஹேதுவான மனசு ஒன்றும் சேர்ந்த இவைகள் தான் (மொத்தம் இருபது நான்கு)
பரமபதம் செல்ல வழித்துணை வேண்டுமோ என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழும். அதற்கும்
இவ் வாழ்வார் திரு நாடு செல்வோர்க்கெல்லாம் அந்த நாராயணனே துணை என்று
தனது பத்தாம் பதிகத்தில் வந்து அடைகிறார் திருமோகூர்  காளமேக பெருமாளை.
இங்கு உள்ள தடாகம் தாளதாமரைத் தடாகம் என்றே வழங்கப்படுகிறது.
இதையே பெரியாழ்வாரும் "உரம்பெற்ற மலர்க்கமலம் உலகளந்த சேவடி போலுமர்ந்து
காட்ட, வரம்புற்ற கதிர்ச்சென் நெல்தாள் சாய்த்து தலைவணங்கும் தன்னரங்கமே " என்று கூறுகிறார்.
ஆகாசம் அளவு ஓங்கியிருக்கும் தாமரையை காணும்போது உலகளந்த சேவடியை சேவித்தார் போல் 
இருக்கும் என்றும், சென்னல்நெற்பயிர்கள் கதிர் கனத்தாலே தலை வணங்கி இருக்கும் வயல் நிலயை
காணும் போது வணக்கமே வடிவெடுத்திருக்கும் பகவதோத்தமர்களை   சேவித்தார்  போல் இருக்கும் என்கிறார்       
திருமோகூர் நலங்கொள் நான் மறை வாணர்கள் வாழும் இடம். நலங்கொள் என்பது நான் மறைக்கும்
ஆகலாம், நான் மறை வானர்கட்கும் ஆகலாம் என்று அறிக. இத் தலத்தில் சிவன் முதலானோர், தேவர்கள்
வந்து பணிவதாக மரபு.
ஒரு பாசுரத்தில் கூத்தன் என்று கூறுகிறார் ஆழ்வார். கூத்தன் என்றால் அது நடராஜனைத் தானே குறிக்கும்.
ஆனால் நடை நடக்கும் அழகே கூத்தாடினார் போல இருக்கும் என்கிறார் இந்த திருமொஹூர் திவ்ய தேசத்தில்.
இங்கு ராமாயணம் பிரமாணம் காட்டப்பட்டிருக்குது. "அக்ரத ப்ரயயௌ ராம " யயௌ என்று சொல்லாமல்
"பிரயயௌ" என்பதால் ஆழ்வார் நடையில் விசேஷம் காட்டப்பட்டு இருக்கிறது என்பதை அறிக. இந்த நடை
அழகை ராமனிடத்திலும், கண்ணனிடமும் காணலாம் என்பதால் "கேசவன்" என்று கூறுகிறார்  
ஒன்று எட்டாம் பதிகத்தில் பெரியாழ்வர் கூறுகிறார்
"ஒருகாலில் சங்கு, ஒருகாலில் சக்கரம் உள்ளபடி பொறித்தமைந்த
இருகாலும் கொண்டு அங்கங்கு எழுதினாற்போல் "
இதிலிருந்து ஒன்று தெரிகிறது நம் ஆச்சார்யர்கள் தன் சிஷ்யர்களுக்கு இடும்
"சமாஷ்யணம்" இதன் மூலம் தான் வந்ததோ என்று.
திருவாய்மொழி ஆயிரமும் அரங்கனைதான் குறிக்கும் என்று கூறுவதில் உண்மை உண்டா?
பட்டர் அருளிச் செய்த "வான் திகழும் சோலை மதிள் அரங்கர் வண்புகழ்மேல் ஆன்றதமிழ்
மறைகள் ஆயிரமும் " என்பது ஒரு சான்று.
பல திவ்ய தேசங்கள் அனுபவிக்க பட்டுள்ளது. அதனுள் திருவரங்கமும் ஒன்று என்றும் கூறுவர்
பெரியோர்கள்.
கங்குலும் பகலும் பதிகத்தின் முடிவில் "முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை
ஆயிரமும் என்பதில் இருந்து அவர் பாடினது எல்லாமே அந்த அரங்கநாதனை மட்டும் தான்
என்றும் அதிலிருந்து சில திவ்ய தேசத்திற்கு பகிர்ந்து கொடுத்து இருக்கிறார் என்பது
கருத்து.
எப்படி பெருமாள் திருப்பலகையில் அமுதுபடியிலே மற்றத் திருப்பதி நாயன்மார்க்கும்
அளந்து கொடுக்குமாப்போலே என்று பிள்ளயருளிச்செய்வார்.
பிள்ளைக்குழாங்கள் திரண்டு விளையாடும் இடம் என்பது கோவில் வாசலிலே.
தென் தெருப்பேரியில் எம்பெருமான் தானும் அந்த விளையாட்டின் சுவையை காண
ஆசைப்பட்டானாம். எதிரே பெரிய திருவடி சன்னதியில் இருந்து இடைச்சுவராய்
இருந்தபடியாலே அந்த விளையாட்டை காண முடியாததால் "கருடா"
அப்பால் போ என்றதால் தள்ளி இருக்கிறாராம் அந்த கருடன் இந்த தேசத்தில்.
இந்த நலமாய் நாளைக்கும் காணலாம்.  
,
adiyen,
nochalur seshadri sampath.           

No comments: