Saturday, March 19, 2011

விஷ்ணு சஹஸ்ரநாமம் — தமிழில்

விஷ்ணு சஹஸ்ரநாமம் — தமிழில்
______________________________________

தென்னன் தமிழ்

விஷ்ணு சஹஸ்ரநாமம் — தமிழில்

Posted in ஸ்தோத்ரம் by thiruthiru on May 24, 2009
.3.
 
மதகளி றன்னான் வெல்க; மதுரைப்
பதியினன் வெல்க; பத்தராவி வெல்க;
அசுரர் கூற்றம் வெல்க; மணித்தேர்
விசயற் கூர்ந்தான் வெல்க; யசோதைதன்
சிங்கம் வெல்க; சிலையாளன் வெல்க;
செங்கதிர் முடியான் வெல்க; அடலாழிப்
பிரானவன் வெல்க; பீடுடையான் வெல்க;  410.
இராவ ணாந்தகன் வெல்க;அந்தமில்
புகழான் வெல்க;புதுனலுருவன் வெல்க;
திகழும் பவளத் தொளியான் வெல்க;
அந்தமிழ் இன்பப் பாவினன் வெல்க;
இந்திரன் சிறுவன்தேர் முன்னின்றான் வெல்க;
ஆநிரை மேய்த்தான் வெல்க;வைத்த
மாநிதி வெல்க;மண் ணிரந்தான் வெல்க;
மத்த மாமலை தாங்கீ வெல்க;             420
சித்திரத் தேர்வலான் வெல்க;சீற்றம்
இல்லவன் வெல்க;இழுதுண்டான் வெல்க;
மல்லரை யட்டான் வெல்க;மாசறு
சோதீ வெல்க;சுடர்விடு கமலப்
பாதன் வெல்க;பகலாளன் வெல்க;
படிக்கே ழில்லாப் பெருமான் வெல்க;
இடிக்குர லினவிடை யடர்த்தான் வெல்க;    431
அரட்டன் வெல்க;அரியுருவன் வெல்க;
இரட்டை மருதம் இறுத்தான் வெல்க;
வாணன் தடந்தோள் துணித்தான் வெல்க;
ஓணத்தான் வெல்க;உந்தியில் அயனைப்
படைத்தான் வெல்க; பருவரையாற் கடலை
அடைத்தான் வெல்க; ஆழிசங்கு வாழ்வில்
தண்டா திப்பல் படையான் வெல்க;
அண்டமோ டகலிடம் அளந்தான் வெல்க;
அரியுரு வாகி யந்தியம் போதில்
அரியை யழித்தவன் வெல்க; அமரர்
பிதற்றும் குணங்கெழு கொள்கையன் வெல்க;  440
மதியுடை அரற்கும் மலர்மகள் தனக்கும்
கூறு கொடுத்தருள் உடம்பன் வெல்க;
ஏறும் இருஞ்சிறைப்புட் கொடியான் வெல்க;
ஒத்தார் மிக்கார் இல்லவன் வெல்க;
பத்திரா காரன் வெல்க;பழமறை
தேடியுங் காணாச் செல்வன் வெல்க;
ஆடும் கருளக் கொடியான் வெல்க;
அடைந்தார்க் கணியன் வெல்க;கடலைக்
கடைந்தான் வெல்க;கட்கினியான் வெல்க;
காண்டற் கரியவன் வெல்க;புள்வாய்                450
கீண்டான் வெல்க;கேடிலான் வெல்க;
கையில் நீளுகிர்ப் படையான் வெல்க;
வையம் அளந்தான் வெல்க;யாவையும்
ஆனான் வெல்க;அமுதுண்டான் வெல்க;
ஊனா ராழிசங் குத்தமன் வெல்க;
அவலம் களைவான் வெல்க; என்றானும்
அவுணர்க் கிரக்கம் இலாதான் வெல்க;
அறவ னாயகன் வெல்க;மனத்து                    460
அறமுடை யோர்கதி வெல்க;அறுசுவை
அடிசில் வெல்க;ஆதிப்பிரான் வெல்க;
வடிசங்கு கொண்டான் வெல்க;வண்புகழ்
நாரணன் வெல்க;நாயகன் வெல்க;
ஆர மார்பன் வெல்க;அண்டர்
தங்கோன் வெல்க;தம்பிரான் வெல்க;
சங்கமிடந்தான் வெல்க;சனகன்                    470
மருமகன் வெல்க;மதுசூதன் வெல்க;
உருவு க்கரிய ஒளிவணன் வெல்க;
எங்கும் பரந்த தனிமுகில் வெல்க;
நங்கள் நாதன் வெல்க;நல்வினைக்கு
இன்னமுது வெல்க;ஏழிசை வெல்க;
பிள்ளை மணாளன் வெல்க;வலத்துப்
பிறைச்சடை யானை வைத்தவன் வெல்க;
நிறைஞா னத்தொரு மூர்த்தி வெல்க;                480
அலைகடற் கரைவீற் றிருந்தான் வெல்க;
சிலையால் மராமரம் சிதைத்தான் வெல்க;
அனந்த சயனன் வெல்க;இலங்கையைச்
சினந்தனால் செற்ற கோமகன் வெல்க; 
ஆய்ப்பாடி நம்பி வெல்க;நஞ்சுகால்
பாப்பணைப் பள்ளி மேவினான் வெல்க;
உலகளிப்  பானடி நிமிர்த்தான் வெல்க;
உலகமூன் றுடையான் வெல்க;உறங்குவான்
போல யோகுசெய் பெருமான் வெல்க;
காலசக் கரத்தான் வெல்க;காலநேமி               490
காலன் வெல்க; காமரூபி வெல்க;
பால்மதிக் கிடர் தீர்த்தவன் வெல்க;
பிறப்ப றுக்கும் பிரானவன் வெல்க;
மறைப்பெ ரும்பொருள் வெல்க; மனனுணர்
அளவிலன் வெல்க;அண்டவாணன் வெல்க;
வளரொளி யீசன் வெல்க;வருநல்
தொல்கதி வெல்க;தூமொழியான் வெல்க;          500
செல்வமல்கு சீரான் வெல்க;செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலன் வெல்க;
வைப்பே வெல்க;மருந்தே வெல்க;
வியலிட முண்டான் வெல்க;நமன் தமர்க்கு
அயர வாங்கரு நஞ்சன் வெல்க;
ஆய்மகள் அன்பன் வெல்க;வஞ்சப்
பேய்மகள் துஞ்சநஞ் சுண்டான் வெல்க;
அழகியான் வெல்க;அலங்காரன் வெல்க;            510
தழலைந் தோம்பி வெல்க; தக்கணைக்கு
மிக்கான் வெல்க;விண்ணவர் கோன் வெல்க;
திக்குநிறை புகழான் வெல்க;திருவாழ்
மார்பன் வெல்க;மதுரவாறு வெல்க;
கார்மலி வண்ணன் வெல்க;குவலயத்
தோர்தொழு தேத்தும் ஆதி வெல்க;
செங்கமல நாபன் வெல்க;நரங்கலந்த               520
சிங்கம் வெல்க;சிந்தை தன்னுள்
நீங்காதிருந்த திருவே வெல்க;
தேங்கோதநீர் உருவன் வெல்க;
பிள்ளையரசு வெல்க;பிள்ளைப்பிரான் வெல்க;
வெள்ளியான் வெல்க;வேதமயன் வெல்க;
வேல்வேந் தர்பகை கடிந்தோன் வெல்க;
ஆல்மேல் வளர்ந்தான் வெல்க;ஆழி
வலவன் வெல்க;வாயழகன் வெல்க;                 531
நிலமுன மிடந்தான் வெல்க;நீலச்
சுடர்விடி மேனி யம்மான் வெல்க;
அடியார்க் கென்னை ஆட் படுத்தோன் வெல்க;
பாரதம் பொருதோன் வெல்க;பாரளந்த
பேரரசு வெல்க;பெற்றமாளி வெல்க;
காளை யாய்க் கன்று மேய்த்தான் வெல்க;
கேளிணை ஒன்றும் இலாதான் வெல்க;
வேதத்து அமுதமும் பயனும் வெல்க;                 540
வேத முதல்வன் வெல்க;வேதத்தின்
சுவைப் பயன் வெல்க;சுடரான் வெல்க;
நவின்றேத்த வல்லார் நாதன் வெல்க;
ஆதி மூர்த்தீ வெல்க;அந்தியம்
போதில் அவுணனுடல் பிளந்தான் வெல்க;
ஆமையும் ஆனவன் வெல்க; துளவுசேர்
தாமநீண் முடியன் வெல்க;தனிப்பெரு
மூர்த்தி வெல்க; முண்டியான் சாபம்
தீர்த்தான் வெல்க;தெய்வம் வெல்க;
வளைவணற் கிளையவன் வெல்க;தயிரொடு          551
அளைவெணெய் உண்டான் வெல்க;மெய்ந்நலம்
தருவான் வெல்க;சாமமா மேனி
உருவான் வெல்க;உய்யவுலகு படைத்து
உண்டமணி வயிறன் வெல்க; அண்டமாய்
எண்டிசைக் குமாதி வெல்க;அண்டமாண்
டிருப்பான் வெல்க;இருங்கைம் மாவின்
மருப்பொசித் திட்டான் வெல்க;மரமெய்த
திறலான் வெல்க;தீமனத் தரக்கர்                     560
திறலை யழித்தான் வெல்க;திருவின்
மணாளன் வெல்க;மண்ணுயிர்க் கெல்லாம்
கணாளன் வெல்க;மண்ணழகன் வெல்க;
கையெடு கால்செய்ய பிரான் வெல்க;
வைகுந்த நாதன் வெல்க; வைகுந்தச்
செல்வன் வெல்க;செங்கணான் வெல்க;
தொல்வினைத் துயரைத் துடைப்பான் வெல்க;
கூரா ராழிப் படையவன் வெல்க;                    570
காரேழ் கடலேழ் மலையே ழுலகும்
உண்டும்ஆ ராத வயிற்றன் வெல்க;
தொண்டர் நெஞ்சில் உறைவான் வெல்க;
கொடைபுகழ் எல்லை யிலாதான் வெல்க;
குடமாடு கூத்தன் வெல்க;குவளை
மலர்வணன் வெல்க;மண்கொண்டான் வெல்க;
புலம்புசீர்ப் பூமி யளந்தவன் வெல்க;
உலகுண்ட வாயன் வெல்க;ஊழியேழ்
உலகுண் டுமிழ்ந்த ஒருவன் வெல்க;
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே வெல்க;                    580
கடல்படா அமுதே வெல்க;அம்பொனின்
சுடரே வெல்க;நற் சோதீ வெல்க;
அமரர் முழுமுதல் வெல்க;அமரர்க்கு
அமுதம் ஊட்டிய அப்பன் வெல்க;
அமரர்க் கரியான் வெல்க;பொதிசுவை
அமுதம் வெல்க;அறமுதல்வன் வெல்க;
அயனை யீன்றவன் வெல்க;ஆலினிலைத்
துயின் றவன் வெல்க;துவரைக்கோன் வெல்க;     591
அரக்க னூர்க்கழல் இட்டவன் வெல்க;
இருக்கினில் இன்னிசை யானான் வெல்க;
விழுக்கையாளன் வெல்க;துளவம்
தழைக்கும் மார்பன் வெல்க;அளத்தற்கு
அரியவன் வெல்க;அயோத்தி யுளார்க்கு
உரியவன் வெல்க;உயிரளிப்பான் வெல்க;
ஏழுல குக்குயிர் வெல்க;ஆற்றல்
ஆழியங் கையமர் பெருமான் வெல்க;              600.
                                                                  தொடர்வது   "அருள்க"
 

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் தமிழில்

Posted in ஸ்தோத்ரம் by thiruthiru on March 1, 2009
திருவல்லிக்கேணி பழைய புத்தகக் கடையில் 1963ல் ஸ்ரீராமகிருஷ்ண மடத்திலிருந்து வெளியிட்ட ‘தமிழில் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர நாமம்" நூலிலிருந்து முதல் 200 நாமாவளிகள் இங்கே ! திவ்ய ப்ரபந்தத்திலிருந்து தொகுத்திருக்கிறார்கள்.
 
 
 
 அயர்வறும் அமரர்கள் அதிபதி போற்றி;
 உயர்வற உயர்நலம் உடையவ போற்றி;
 மயர்வள மதிநலம் அருளினாய் போற்றி;
 பயிலும் சுடரொளி மூர்த்தி போற்றி:
 பூமகள் நாயக போற்றி; ஓசை
 மாமத யானை உதைத்தவ போற்றி;
 அண்டக் குலத்துக் கதிபதி போற்றி;
 பிண்டமாய் நின்ற பிரானே போற்றி;
 அத்தா போற்றி; அரியே போற்றி;
  பத்துடை யடியவர்க் கெளியாய் போற்றி;
  அகவுயிர்க் கமுதே போற்றி; மாயச்
சகடம் உதைத்தாய் போற்றி; ஞானச்
சுடரே போற்றி; சொல்லுளாய் போற்றி;
உடையாய் போற்றி; உத்தமா போற்றி;
அதிர்குரல் சங்கத் தழகா போற்றி;
கதியே போற்றி; கரியாய் போற்றி;
குறளாய் போற்றி; குருமணி போற்றி;
மறையாய் போற்றி; மாதவா போற்றி;
அந்தணர் வணங்கும் தன்மைய போற்றி;
சிந்தனைக் கினியாய் போற்றி; சிற்றாயர்
சிங்கமே போற்றி; சேயோய் போற்றி;
அங்கதிர் அடியாய் போற்றி; அசுரர்கள்
நஞ்சே போற்றி; நாதா போற்றி;
பஞ்சவர் தூதா போற்றி; பாரிடம்
கீண்டாய் போற்றி; கேசவா போற்றி;
 
 
நீண்டாய் போற்றி; நிமலா போற்றி;
முதல்வா போற்றி; முத்தா போற்றி;
அழகா போற்றி ; அமுதே போற்றி;
கஞ்சனைக் காய்ந்த காளாய் போற்றி;
அஞ்சனக் குன்றே போற்றி; அஞ்சன
வண்ணா போற்றி; வள்ளலே போற்றி;
அண்ணா போற்றி; அண்ணலே போற்றி;
அச்சுதா போற்றி; அச்சனே போற்றி;
அச்சுவைக் கட்டியே போற்றி; அந்தணர்
சிந்தையாய் போற்றி; சீதரா போற்றி;
அந்த முதல்வா போற்றி; அந்தரம்
ஆனாய் போற்றி; அருவா போற்றி;
வானே தருவாய் போற்றி; வேதப்
பிரானே போற்றி; பிறப்பிலி போற்றி;
இராமா போற்றி; இறைவா போற்றி;
வக்கரன் வாய்முன் கீண்டவ போற்றி;
அக்கா ரக்கனி போற்றி; அங்கண்
நாயக போற்றி;  நம்பீ போற்றி;
காய்சின வேந்தே போற்றி; அங்கை
ஆழிகொண் டவனே போற்றி; அந்தமில்
ஊழியாய் போற்றி; உலப்பிலாய் போற்றி;
காரணா போற்றி; கள்வா போற்றி;
சீரணா போற்றி; கேசவா போற்றி;
உரையார் தொல்புகழ் உத்தம போற்றி;
அரையா போற்றி; அண்டா போற்றி;
அந்தமில் ஆதியம் பகவனே போற்றி;
அந்தணர் அமுதே போற்றி; ஆநிரை
காத்தாய் போற்றி; கருமணி போற்றி;
கூத்தா போற்றி; குறும்பா போற்றி;
ஆவலன் புடையார் மனத்தாய் போற்றி;
மூவர்கா ரியமும் திருத்துவாய் போற்றி;
மூதறி வாளனே போற்றி; முதுவேத
கீதனே போற்றி; கேடிலி போற்றி;
அடர்பொன் முடியாய் போற்றி; மென்தளிர்
அடியாய் போற்றி; அமலா போற்றி;
அடிமூன் றிரந்தவன் கொண்டாய் போற்றி;
கடவுளே போற்றி; கண்ணாவாய் போற்றி;
அரவப் பகையூர் பவனே போற்றி;
குரவை கோத்த கு.கா போற்றி;
அலரே போற்றி; அரும்பே போற்றி;
நலங்கொள் நாத போற்றி; நான்மறை
தேடி ஓடும் செல்வா போற்றி;
ஆடா வமளியில் துயில்வோய் போற்றி;
மூன்றெழுத் தாய முதல்வா போற்றி;
தோன்றாய் போற்றி; துப்பனே போற்றி;
அலமும் ஆழியும் உடையாய் போற்றி;
கலந்தவர்க் கருளும் கருத்தாய் போற்றி;
அணிவரை மார்ப போற்றி; அரிகுலம்
பணிகொண்டலைகடல் அடைத்தாய் போற்றி;
அரிமுக போற்றி; அந்தணா போற்றி;
உரகமெல் லணையாய் போற்றி; உலகம்
தாயவ போற்றி; தக்காய் போற்றி;
ஆயர்தம் கொழுந்தே போற்றி; யார்க்கும்
அரிநவ போற்றி; அப்பனே போற்றி;
கரநான் குடையாய் போற்றி; கற்பகக்
காவன நற்பல தோளாய் போற்றி;
ஆவினை மேய்க்கும்வல் லாயா போற்றி;
ஆலநீள் கரும்பே போற்றி; அலையார்
வேலை வேவவில் வளைத்தாய் போற்றி;
அப்பிலா ரழலாய் நின்றாய் போற்றி;
செப்பம துடையாய் போற்றி; சேர்ந்தார்
தீவினை கட்கரு தஞ்சே போற்றி;
காவல போற்றி; கற்கீ போற்றி;
குன்றால் மாரி தடுத்தவ போற்றி;
நன்றெழில் நாரண போற்றி; நந்தா
விளக்கே போற்றி; வேதியா போற்றி;
அளப்பரு வேலையை அடைத்தாய் போற்றி;
சீலா போற்றி; செல்வா போற்றி;
பாலா லிலையில் துயின்றாய் போற்றி;
மிக்காய் போற்றி; ஒண்சுடர் போற்றி;
சக்கரச் செல்வா போற்றி; நலனுடை
ஒருவா போற்றி; ஒண்சுடர் போற்றி;
அருமறை தந்தாய் போற்றி; ஆணிச்
செம்பொன் மேனி எந்தாய் போற்றி;
எம்பிரான் போற்றி; எங்கோன் போற்றி;
உறவு சுற்றம் ஒன்றிலாய் போற்றி;
பிறர்களுக் கரிய வித்தகா போற்றி;
பரமா போற்றி; பதியே போற்றி;
மரகத வண்ணா போற்றி; மறைவார்
விரித்த விளக்கே போற்றி; மன்றில்
குரவை பிணைந்த மாலே போற்றி;
போதலர் நெடுமுடிப் புண்ணிய போற்றி;
மாதுகந்த மாரபா போற்றி; முனிவரர்
விழுங்கும் கோதிலன் கனியே போற்றி;
அழக்கொடி யட்டாய் போற்றி; அறுவகைச்
சமயமும் அறிவரு நிலையினாய் போற்றி;
அமரர்க் கமுதம் ஈந்தோய் போற்றி; ஆதி
பூதனே போற்றி; புராண போற்றி;
புனிதா போற்றி; புலவா போற்றி;
தனியா போற்றி; தத்துவா போற்றி;
நச்சுவா ருச்சிமேல் நிற்பாய் போற்றி;
நிச்சம் நினைவார்க் கருள்வாய் போற்றி;
ஆளரி போற்றி; ஆண்டாய் போற்றி;
வாளரக்க ருக்கு நஞ்சே போற்றி;
விகிர்தா போற்றி; வித்தகா போற்றி;
உகங்கள் தொறுமுயிர் காப்பாய் போற்றி;
மல்லா போற்றி; மணாளா போற்றி;
எல்லாப் போருளும் விரித்தாய் போற்றி;
வையந் தொழுமுனி போற்றி; சக்கரக்
கையனே போற்றி; கண்ணா போற்றி;
குணப்பரா போற்றி; கோளரி போற்றி;
அணைப்பவர் கருத்தாய் போற்றி; அந்தணர்
கற்பே போற்றி; கற்பகம் போற்றி;
அற்புதா போற்றி; அற்றவர் கட்கரு
மருந்தே போற்றி; மருத்துவ போற்றி;
இருங்கை மதகளி றீர்த்தாய் போற்றி;
உள்ளுவார் உள்ளத் துறைவாய் போற்றி;
தெள்ளியார் கைதொழும் தேவனே போற்றி;
வாமா போற்றி; வாமனா போற்றி;
ஆமா றறியும் பிரானே போற்றி;
ஓரெழுத் தோருரு வானவ போற்றி;
ஆரெழில் வண்ண போற்றி; ஆரா
அமுதே போற்றி; ஆதிநீ போற்றி;
கமலத் தடம்பெருங் கண்ணா போற்றி;
நண்ண லரிய பிரானே போற்றி;
கண்ணுதல் கூடிய அருத்தா போற்றி;
தொல்லையஞ் சோதி போற்றி; ஞானம்
எல்லையி லாதாய் போற்றி; கவிக்கு
நிறை பொருள் போற்றி; நீதியே போற்றி;
அறந்தா னாகித் திரிவாய் போற்றி;            200.
             வாழ்த்து 200 தொடரும்…….
 
 

ஸ்ரீராம ஸ்தோத்ரம்

Posted in ஸ்தோத்ரம் by thiruthiru on November 4, 2007
        
 
 
 
 
                  ஸ்ரீ இராமர் ஸ்தோத்ரம் 
 
பூதலத்தை யோரடி அளந்த ரூபமானபொற்
 பாததாமரைச்சரண்பணிந்து பூசை செய்குவேன்
மாதவாகோவிந்தாஹரிகேசவாநாராயணா
நாதகீதவேதமந்த்ர ராமராமராமனே!
 
சூகரத்தின் வடிவெடுத்த சுந்தரா சௌந்தரா
ஏகலோகநாயகா நீயெங்குமாய் நிறைந்தவா
மேகமா யளாவிநின்ற வேதஞானதேசிகா
நாகமீதில் மேவுகின்ற ராமராமராமனே!
 
காரணா தாமோதரா கரியநீலவண்ணனே
பூரணா பயோதரா புராதனா நிராதனா
வாரணாதிமூலமென்ற போதுவந்த வாமனா
நாரணா யசோதைபுத்ர ராமராமராமனே!
 
வீரசிம்ஹ உக்ரமுற்ற விஜயன்மீதுதசரதன்
பாரின்மீது மைந்தனாகவந்த பஞ்சவர்சகாயனே
பூரணா க்ருபாகரா புதியதூணில்வந்துமுன்
நாரஸிம்ஹ ரூபமான ராமராமராமனே!
 
மாமனான கம்சனை வளைந்துகொன்று வென்றவா
பூமியுண்டுமிழ்ந்தவா புகழ்ந்தபொன்னரங்கனே
வாமனஸ்வரூபனான வாசுதேவதேவனே
நாம மாயிரம் படைத்த ராமராமராமனே!
 
கோடி சூரிய ப்ரகாச கொண்டல்மேக வண்ணனே
வாடிநொந்திடைந்திடாமல் வந்தருள்புரிந்தருள்
தேடிஅந்தகன் வெகுண்டுசீறி மேவி உன்னிடம்
நாடி வந்தபோது காரும் ராமராமராமனே!
 
தந்திதான் முன்னோலமென்ற போதுவந்த வாமனா
வந்துகாத்ததன்றுபோல் வந்துகாப்பதெந்தநாள்
செந்திருமணாளனான ஸ்ரீநிவாஸநாதனே
நந்திசேகரன் தரித்த ராமராமராமனே!
 
எண்ணி யன்பரானபேர் இடத்திருந்து வாவியே
புண்ணியநாம தேசிகா புவனரக்ஷகாரனே
வண்ணனே லீலாவிநோதவாசனே நின்மலரடி
நண்ணினேன் வைகுந்தமேவும் ராமராமராமனே!
 
தானம்செய்தும் அறிகிலேன் தவங்கள்செய்தும் அறிகிலேன்
ஆனவன்பரான பேர்க்கு அன்னமிட்டும் அறிகிலேன்
தேனமர்துழாய்கொண்டு உன்னைச் சிந்தைசெய்தும் அறிகிலேன்
நானறிந்ததொன்றுமில்லை ராமராமராமனே!
 
களபவாசனை மிகுந்த கரியமேகவண்ணனே
துளபமாலை மார்பினில் புனைந்த சுருதிவேதநாயகா
உளம் மகிழ்ந்து கருணைகொண்டு உன்னடிமையென்று நான்
நளினபாதம் தந்து காரும் ராமராமராமனே!
 
இல்லறத்தின் மாயையாலே ஏங்கினேன்மயங்கியே
புல்லறிவுகொண்டுயானும் போற்றி உன்னைப் பணிந்திலேன்
அல்லல் உற்றகாயமென்று அறிந்துவந்து என்னுளே
நல்லறிவு தந்து ரக்ஷி ராமராமராமனே!
 
சங்குசக்கரம்தரித்த சாருஸ்ரீநிவாசகா
எங்குமாய்நிறைந்தவா இலங்குமுந்நூல்மார்பனே
மங்குல்மேனியாள் இலங்கு மகரகுண்டலாதிபா
ரங்கநாயகா முகுந்தராமராமராமனே!
 
ஆழிமீது நின்றுயர்ந்த அச்சுதா முன்னாதியில்
ஏழுமராமரத்தை எய்தி ராவணாதிகள்
மாளவேசரம் தொடுத்த மாயனேமகிழ்ந்து
எந்நாளும் நீ உகந்துகாரும் ராமராமராமனே!
 
கோலினின்று உயர்ந்தவா குசத்தில் ஏறிநின்றவா
காளைகன்றுமேய்த்தவா முன்கம்சனைவதைத்தவா
சாலநான்முகனை யுந்திதன்னில்படைத்தவா
நாலுவேதமும் புகழ்ந்த ராமராமராமனே!
 
மத்ஸ்யரூப ராகவா வராகரூபராகவா
கொச்சை யாயருக்குகந்து குன்றெடுத்துநின்றவா
பச்சை ஆலில் துயின்ற பச்சைநீலவண்னனே
ரக்ஷகாஸ்ரீராகவா ஸ்ரீராமராமராமனே!
 
தஞ்சமாவதேதுன் பாததாமரைச்சரண்
மிஞ்சவேறு தப்புமில்லைமேகநீலவண்னனே
அஞ்சலஞ்சல் என்று கையமர்த்தி ஆதரிப்பராரையா
ரஞ்சிதப்ரகாசனான ராமராமராமனே!
 
விருந்துசெய்ய வேண்டுமென்று விதுரன்மனையிலேகியே
இருந்துமாயையாக வில்லிரண்டு துண்டமாக்கினாய்
பொருந்துமாயமோ மயக்க புண்டரீகமாயனே
நறுந்துளவ மணிந்தரங்க ராமராமராமனே!
 
மாயவாமுன்பாரதப் போர்வந்துதோன்றும் நாளையில்
நேயமாய் அர்ச்சுனர்க்கு நின்று தேரையூர்ந்தவா
ஆயனேஅனந்தமான ஆதிலட்சுமியென்னும்
நாயகிமணாளனான ராமராமராமனே!
 
பாவியென்றுபேர்கொடாதே பஞ்சபாதகங்களை
மேவிநூறு குற்றமே செய்தாலும் வந்துமெய்தனில்
காவலாகநீயிருந்து கருணைகொண்டுகாரையா
நாவினால் நிதம்துதிப்பேன்ராமராமராமனே!
 
அம்புவிழிமாதர்கள் ஆசைதன்வலைக்குள்ளே
இன்பசாகரந்தரித்த எண்னமற்றவஞ்சகன்
வம்புகோடிசெய்திடினும் மாயனேபொறுத்திடாய்
நம்பினேன்நான் உனதடிமைராமராமராமனே!
 
கந்தமர்துழாயணிந்த கருடகேசவாகனா
சொந்தடிமை இவனுமென்று சூக்ஷ்மபாதம் நல்கியே
இந்தவேளைவந்து ரட்சி ஏகலோகநாயகா
நந்தகேசவா முகுந்தராமராமராமனே!
 
சிகரகோபுரம்சிறந்த செய்யவீதிசூழவே
மகரதோரணம் சிறப்ப வரிசைமண்டபங்களும்
பகரமுற்றகொடிகளும் பணிந்துதான் அயோத்தியில்
நகரவாசமாயிருந்த ராமராமராமனே!
 
குற்றமென்ப தெதுசெய்தாலும் கொலைகள்செய்திருப்பினும்
பெற்றதாய்விரோதமுண்டோ பிள்ளையென்றுகொஞ்சுவாள்
அற்றதன்மையாவனோ யான்குறைசெய்தாலுமென்
நற்றமிழ் உகந்து காரும்ராமராமராமனே!
 
சாடிசெய்துரியோதனன் சபையில்திரௌபதிதனை
ஆடையுரித்தபோது ஆதிமூலமென்றிட
வாடிடாமல்நாணம்காத்து விளையுமாறுசேலைகள்
நாடியொன்று இலட்சமாக்கும் ராமராமராமனே!
 
கற்சிலையெனச்சபித்த அகலிகைசாபத்தையும்
உச்சிதமாகவென்று  அந்தசாபம்நீக்கினாய்
ஜானகிதனைமேவ ஆசைதன்மிதிலைக்குளே
நற்சிலைவளைத்துநின்ற ராமராமராமனே!
 
வாசமாளிகைபொலிந்த மண்ணையுண்டவண்ணனே
கேசவாமுராரிநந்த கிருஷ்ணனேமனோகரா
தாசனென்றுபாததாமரைச் சரண்கொடுத்தருள்
நேசவேங்கடேசனான ராமராமராமனே!
 
ஆவல்கொண்டுபாரிலே அலைந்துமேயலாதிகள்நின்
சேவடிக்காளாய்வராத ஜென்மமென்னஜென்மமோ
பாவகாரியென்றெண்ணாமல் பாதுகாத்தருள்புரி
நாவலர்க்கன்பால் உகந்தராமராமராமனே!
 
ஏகவஸ்துவாகிநின்ற எங்கள்ரங்கநாயகா
சாகரத்தினின்றுயர்ந்த சஹஸ்ரநாமதேசிகா
மோகனாசௌந்திரா முராரிமோக்ஷகாரணா
காகவண்னன் ஆகிவந்த ராமராமராமனே!
 
ஜானகிமணாளனாய் தரணியையோரடியுமாய்
வானமோடளாவிநின்ற வராகவவதாரனே
நமோநமோநாராயணா முகுந்தநந்தகேசவா
ஞானதேசிகப்ரதாப ராமராமராமனே!
             
                     பலச்ருதி
செப்பியேவுந்திபோற்றும் செங்கண்மால்பாதம்போற்றி
முப்பதும்படித்தோர்கேட்டோர் முற்றிலுமெழுதினோர்க்குத்
தப்பில்லாவரங்கள்தந்து சந்ததிகிளைபெற்றோங்க
இப்புவிதனில்வாழ்ந்து எண்ணமற்றுஇருப்பர்தாமே

No comments: